Tuesday, February 8, 2011

இலஞ்சம்- ஊழல்- ஒரு விளக்கம்-I

சுமார் 200 ஆண்டுகளுக்கு  முன் வங்காளத்தின் கவர்னர் ஜெனரல் -ஆக இருந்தவர் லார்டு காரன்வாலிஸ். இந்தியாவில் அரசுப் பணிகளை அறிமுகப்படுத்தியவர் அவரே! இப்போதைய இந்திய ஆட்சிப் பணிகளையும் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். அரசுப் பணிகளை covenated , Non -covenated services என இரண்டாகப் பகுத்தார் காரன்வாலிஸ். அதாவது covenated என்பதை தற்போதைய IAS -க்கும் Non -covenated என்பதை Staff selection commission - மூலம் கிடைக்கும் பதவிகளுக்கும்  ஒப்பிடலாம். 
இதில் covenated services -க்கு வெள்ளையர்களை மட்டும் தேர்ந்தெடுத்தார் காரன்வாலிஸ். ஏன் என்று கேட்டதற்கு அவர் கொடுத்த ஒரே விளக்கம். 

'Every Hindustani is Corrupt'  

இதில் கூறப்பட்ட 'Every Hindustani' என்பது எல்லா காலத்திலும் இருந்த இனி பிறக்கப்போகிற இந்தியர்களையும் உள்ளடக்கியது. காந்தி உட்பட! (காந்தி அப்போது பிறக்கவே இல்லை என்றாலும் கூட!)

ஆசிய மக்கள், குறிப்பாக நிலநடுக்கோடு அருகில் வசிக்கும் மக்களின் தன்மை பற்றி கூறும்போது  ரோம் நகரத்தின் பிரபல புவியியலாளர் ஸ்ட்ராபோ -'The Most timid people ' என வருணிக்கிறார். Timidness என்றால் அடிமையின் மோகம் என்று பொருள். அவ்வாறு அடிமைப்பட்ட மக்கள், அடிமைத்தனத்தை விரும்பும் மக்கள் அடிமைப் படுத்தவும் விரும்புவார்கள்! வாய்ப்பு கிடைக்கும்போது பிறரின் வாழ்வாதாரத்தை கவர்வதற்கும் தயங்கமாட்டார்கள். அதிகாரத்தை அடைந்தவர்கள் அதனை மிக மோசமாக பயன்படுத்துவார்கள். இது ஒரு பொதுப்படுத்தப்பட்ட மதிப்பீடுதான்  என்றாலும் இதனை மறுக்க முடியாது! 

இன்னும் சொல்லப் போனால் லஞ்சமும் ஊழலும் மனித இனத்தின் கூடவே பிறந்தது. இதனை Hobbes போன்ற அரசியல் அறிவியலாளர்கள் கூறியுள்ளார்கள். 


பிறரை கோப்பிட்டுக் காட்டுவது இருக்கட்டும்!


மனிதனின் ஒவ்வொரு படிநிலைகளிலும் லஞ்சம் தேவைப்படுகிறது. அடம்பிடிக்கும்  குழந்தைக்கு, முத்தம் தரத் தயங்கும் காதலிக்கு, மணம் புரிந்த மனைவிக்கு,  கடவுளுக்கு,  பணி புரியும் இடங்களில் எனப் பலஇடங்களில் லஞ்சம் அவசியமாகிறது. அடம்பிடிக்கும்  குழந்தைக்கு அதற்கு பிடித்த விளையாட்டு சாமான், காதலிக்கு ஒரு ரோஜா, மனைவிக்கு ஒரு சேலை, கடவுளுக்கு தீபாராதனைமற்றும் பணம் என லஞ்சம் உதவுகிறது. கடவுளின் அருளுக்காக லஞ்சம் கொடுக்கக் காத்திருக்கும் வரிசையின் நீளத்தை திருப்பதியில் சென்று பாருங்கள். (லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்க வேண்டும். என்ன எழவுடா இது? எந்த உத்தரவாதமும் இன்றி எப்படி பணத்தை இப்படி கொட்டிக் குடுக்குறான்களோ எனக்குப் புரியவில்லை! எவன வேணுன்னாலும் நம்பலாம். இவனுங்கள நம்பக்கூடாது!) 


லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஊழலின் வடிவம் பெரியது. மக்களுக்குச்  (பிறர்க்கு)  செல்லவேண்டியதை தனக்கு இட்டுக்கொள்வது. லஞ்சம் மிகச் சிறியது. ஆனால் அதன் வடிவங்கள் எண்ணிலடங்காதது. 


Prevention of Corruption Act -லஞ்சம் என்றால் என்னவென்று விவரிக்கிறது. அது ஒரு புறம் இருக்கட்டும். கடமையை செய்யப் பெறுவது லஞ்சமா? கடமையை மீறி அதற்கு மேல் பணிபுரிய பெறுவது லஞ்சமா? அதற்கும் மேலாக, லஞ்சம் பெறுவது தவறா?   


இது குறித்து நாளை பார்க்கலாம். 
   

No comments:

Post a Comment