Saturday, June 18, 2011

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்-கைப்புள்ள

 

சுப்ரமணியம் சுவாமி என்று ஒரு காமெடி பீஸ் ஒண்ணு நாட்டுல திரிஞ்சிக்கிட்டு இருக்கு. அந்தாள காமெடி பீஸுன்னு மட்டும் நினைச்சிரக்கூடாது. அப்பப்ப அது விஷத்தையும் கக்கும். அதாவது பாம்புன்னும் அடிக்க முடியாது. பழுதுன்னு மிதிக்கவும் முடியாது.அப்பிடிக் கக்குன விஷத்தைப் பத்தித்தான் இந்தக் கட்டுரை.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல அது சொல்லியிருக்கு கம்ப்யூட்டருக்கு ஏத்த பாஷை சமஸ்கிருதம்தானாம்! நாசா விஞ்ஞானிகள் கூட அப்பிடித்தான் சொல்லுறாங்களாம். அந்த புத்தகத்தோட பேரு பரமஹம்ச- த வேதாந்திக் டேல். எழுதினவன் பேரக் கேளுங்களேன்! வாயால சிரிக்க மாட்டீங்க! சுப்ரமோனி அவன் பேரு! நேமாலஜி!!!

இது ஒரு பெல்ட்டு கும்பல்ன்னு இப்ப தெரியுதுல்ல?!

அதுல சூனா சானா சொல்றாரு! அமெரிக்காவுல ‘பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை’ ங்கற தலைப்புல இத உரையாற்றக் கூப்புட்டாங்களாம். நீதான் கடலையே தாண்டக் கூடாதே... உன் இந்து சனாதன தர்மத்தின் படி. நீ ஏன் அங்க போன?  

மேற்கத்திய நாடுகள்ல, இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சிய ‘The Hindu rate of Growth’ அப்படின்னுதான் சொல்லுவாங்க! அதாவது ஒரு நாட்டோட GDP யோட வளர்ச்சி  4%-5% இருந்துதுன்னா அதுக்குப் பேரு இதுதான்! இந்து மதத்தால, இந்தியாவால பொருளாதாரப் பாடத்துலயே ஒரு புது Terminology வந்ததுன்னா பாத்துக்கிடுங்க.   சத்தியமா எனக்குத் தெரிஞ்சி இந்து மதம் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் என எந்த ஈரோப்பியனும் அமெரிக்கனும் மனதால் கூட நினைத்திருக்க மாட்டான்! இந்தாள பின்ன எதுக்கு உரையாற்றக் கூப்பிட்டாங்களாம்?

தெரியல!

அப்பறம் அந்த ஜந்து இன்னொன்னும் சொல்லுது. திராவிடன்-னு ஒரு இனமே இல்லையாம். வெள்ளக்காரன் வந்ததுக்கப்புறம்தான், அவன்தான் அப்படிப் பிரிச்சானாம். அடப்பக்கிப் பயலே! கால்ட் வெல் எழுதுன திராவிட மொழிகள் பத்தினப் புத்தகத்த படிச்சிரிக்கியா நீயி? ஒரு எழவும் தெரியாம எப்பிடித்தான் மைக்கப் புடிச்சி பேசுறானுங்களோ?

அமெரிக்காகாரன் இந்துத்வா மேலயும் இந்து சனாதன தர்மங்கள் மேலயும் ரொம்ப ஈடுபாடு காட்டுறாங்களாம். அதான் உங்க தானைத்தலைவர் மோடிக்கு விசா மறுத்தப்பவே தெரிஞ்சிப் போச்சே! இப்போல்லாம் அமெரிக்கா ஜிகாத் தீவிரவாதிகளைவிட இவன மாதிரிப் பயலுங்க கிட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்காங்க!   அப்படியே ஈடுபாடு காட்டினாலும்தான் என்ன இப்போ? எவனோ நாலு லூசுப் பயலுங்க, கேமரா முன்னாடி துணிய அவுக்கிற ரெண்டு நடிகைங்க  ஆகா ஓகோன்னா அதுக்கு நாங்க ஏன் செவி சாய்க்கணும்?

இந்த விஷப்பூச்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது...மந்திரியாக. மேலிடத்தில் இன்னும் செல்வாக்கோடு உலவுகிறது. இதை என்ன செய்வது? 

மற்ற திராவிட மொழிகளில் உள்ள சம்ஸ்கிருத அசுத்தத்தின் நெடியையே தாளவில்லை. இதுல கம்ப்யூட்டர்-ல சமஸ்கிருதமாம். 

இவன் சொல்ற மாதிரி சமஸ்கிருதம் மட்டும் கம்ப்யூட்டர்-ல வந்துட்டா, அன்னைக்கு நான் அதை தொட்டா, அதுக்கு மேல நான் சோத்துக்கைல சோறு திங்க மாட்டேன்யா
             

   

Wednesday, June 15, 2011

ஊழலின் தவிர்க்கவியலாத் தன்மை


ஊழல் ஒழியணும், ஊழல் ஒழியணும்னு ஏதோ காதல் படத்து கிளைமாக்சுல வர்ற பரத் மாதிரி சில பேர் புலம்பறத கொஞ்ச   நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன்! பா(ப்)பா ராம்தேவ் மற்றும் அன்னா ஹஜாரே  ஆகியோரை கழுவிக் கழுவி ஊத்தி திட்டி எழுதுபவர்கள் கூட, கடைசியில "ம்!! ஏதோ நல்லது நடந்தா சரி" என பெருமூச்சு விடுவதைக் காண்கிறேன்.

நிற்க! 

இங்கு ஊழலின் தேவை என்ன என்பதை  சற்று விளக்க வேண்டியிருக்கிறது . 


அரசியலில்  ஊழல் என்பது ஒரு ஒழிக்கப்பட முடியாத Evil என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஊழல் இல்லாத ஒரு அரசினை (அதுவும் வளரும் நாடுகளில்) நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

In fact Corruption is desired for the stability of the political system. It is a necessary Evil. 

ஊழல் இல்லாத ஒரு அரசாங்கம் ஒரு dictatorship-க்குக் கீழோ அல்லது இன்னும் மோசமான perverted political systems-ஆன Oligarchy அல்லது aristocracyக்குக் கீழோ தான்  இருக்க முடியும். அதன் விளைவுகள் பெரும்பாலும் தாங்கவொண்ணாததாகத்தான் இருக்கும். இதுதான் உண்மை. 

ஒரு உதாரணம் சொல்லனும்னா ஐக்கிய நாடுகள் சபைல இருக்கிற பாதுகாப்பு சபையில உக்காந்து இருக்கிற  அஞ்சு தாதாக்களுக்கு இருக்கிற வீட்டோ பவர் மாதிரிதான் ஊழல். வீட்டோ அதிகாரத்தை வைத்து எத்தனையோ சர்வதேச அரசியல் நிகழ்ந்திருந்தாலும், எத்தனையோ நல்ல தீர்மானங்கள் கைவிடப்பட்டிருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபை இன்னும் நிலைத்திருக்க அந்த அதிகாரம்தான் காரணம்.  இல்லையென்றால் அதுல உக்காந்து இருக்கிற அமெரிக்க வஸ்தாது அந்த சபையையே கலைச்சிருவான்.  League of Nations என்கிற சர்வதேச அமைப்பை இப்படித்தான் கலைச்சான் அமெரிக்க வஸ்தாது! 

நான் சொல்றது லூசுத்தனமாக சிலருக்குத் தெரியலாம். அரசியல் அறிவியல் படிச்சவங்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியும்.நல்லாப் புரியும்.

ஊழல் ஒரு நாட்டுல தவிர்க்க முடியாத ஒண்ணு. ஊழல் இல்லையேல் மக்கள் அனுபவிக்கிற துயரங்களைப் பற்றி உலக நாடுகள்ல dictatorship ஐ  அனுபவிச்ச சில நாட்டு மக்கள் கிட்ட போய் கேளுங்க.


Transparancy International-ங்கற ஒரு அமைப்பு நாடுகள்ல நடக்கிற ஊழல் அளவை வச்சி தரவரிசைப்படுத்துறாங்க (Corruption Perception Index). அது டென்மார்க், சிங்கப்பூர் எல்லாம் ரொம்பவும் கை சுத்தமான நாடுகள் அப்பிடின்னு சொல்லுது. மொத்தமே ஒரு கோடி மக்கள் கூட தேறாத அந்த நாடுகளெல்லாம் சந்தோஷமா, Stable-ஆ இல்லையா  அப்பிடின்னு யாரும் கேட்டுறாதீங்க. இந்த தியரி அவங்களுக்குப் பொருந்தாது.

அதனால   

சும்மா ஊழல் ஊழல்னு கத்திக்கிட்டு இருக்காம, கண்ட கண்ட பய புள்ளங்க உண்ணாவிரதத்த பாத்து மயங்காம போயி அவங்க அவங்க சோலியப் பாருங்க!

நாடு தானா முன்னேறிரும்!

Wednesday, June 8, 2011

சிலவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது


பொய்யென்று தெரிந்தும் சில

போலி உறவுகளை

அன்பிலா இதயங்களின் வழி

ஊறும் கானல் காதல்களை


கொல்லக்காத்திருக்கும் வெறியேறிய

விழிகள் வழி தேடுவதை

வெறியை  அன்பாக மாற்றி நடிக்க

தெரிந்த மனிதர்களை


மாறிய வழிபாடுகளை

மாறும் மதப்பெயர்களை

மாறா மனிதர்களை


சிலவற்றை

எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.


ஒரு வயிற்றில் பிறந்தாலும்

ஒன்றையொன்று விழுங்கத்துடிக்கும் சர்ப்பசிசுக்கள்

சூழல் மறுக்கும் சுக்ரீவன்கள்

வதம் செய்யக் கருதும் வாலிகள்


சிலவற்றை

எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.


இருப்பினும்


சிதறிய மணிகளைக் கோர்த்துக்கொண்டு

நாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.




Monday, June 6, 2011

சென்னையில் ஒரு வெய்யில் காலம்!

கடந்த சனிக்கிழமை இரவு ஒரு வேலையாக சென்னைக்கு புறப்பட்டேன்! ராத்திரி ஒன்பது மணிக்கு பஸ் புறப்படுகிறது. அதற்காக ஏழே முக்காலுக்கெல்லாம் நான் தயாராகிவிட்டேன்!
பஸ் ஸ்டாண்டு கூட ந்தா இங்கிட்டுதான். சாப்பிட்டு முடித்துவிட்டு ஆட்டோவில் ஏறினேன்! 8.15க்கு.  அந்த நேரம் பார்த்து ஒரு அதிர்ச்சி. பெங்களூரில் ஸ்டார் கிரிக்கெட் என்று சினிமாக்காரனுங்க எல்லாம் கிரிக்கெட் ஆடுறானுங்க.
(இவனுங்கள யாரு கிரிக்கெட் ஆட கூப்பிட்டது? சத்திய சோதனை)
நான் கிளம்பிய நேரம் அந்த மேட்ச் முடிந்து விட்டது. அந்த டிராபிக்-ல் என்னால் 9.15க்கு தான் பஸ் ஸ்டாண்டுக்கு போக முடிந்தது. டைம் கீப்பரைச் சுற்றி ஒரு ஐம்பது பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.
கஷ்டப்பட்டு அவரிடம் டிக்கெட்-ஐ நீட்டி ' ஐயா, இந்த மாதிரி பஸ்சை மிஸ் பண்ணிட்டேன். எனக்கு வேற பஸ்-ல சீட கெடைக்குமா'-ன்னு கேட்டேன். அவரும் பெரிய மனசு பண்ணி ஒரு பஸ்-ல சீட கொடுத்தாரு.
என்னா ஒரே கஷ்டம்-னா நான் ஏசி பஸ்-ல டிக்கெட் போட்டிருந்தேன். இது நான்-ஏசி. அது பரவாயில்லன்னு ஏறிப்போயிட்டேன்!

சென்னை வெயில்ல வதங்கி ஒரு வழியா ஞாயித்துக் கிழமை (நேத்துதாம்பா) ராத்திரி பஸ் ஏறினேன்! இதுகூட ஏசி பஸ் தான். ஏறி உக்காந்து அரைமணிநேரம் ஆகியும் வேர்த்துக் கொட்டுது. 

 கண்டக்டரை கூப்பிட்டு,
'என்னா சார்! ஏசியே இல்ல. கொஞ்சம் கூட்டி வக்கக்கூடாதா ?' ன்னு கேட்டேன்! அவரு ஸ்டைலா என்ன பாத்துக்கிட்டே சொன்னாரு! ' இருக்கறது இவ்வளவுதான் சார். வர்ரதுன்னா வாங்க, இல்லன்னா வேற பஸ்
புடிச்சி வாங்க'-ன்னார். பெங்களூருக்கு அதுவும் ஞாயித்துக் கிழமை, ரிசரவ் பண்ண பஸ்ச வுட்டுட்டு வேற பஸ் பாத்துக்கறதா? கனவு கூட காணமுடியாது.

வேற வழி!?


பாயே மூச்கொண்டு பர்பேக்கு! அஷ்டே!

ஸ்ரீபெரும்புதூர் வந்தாச்சி. திடீர்னு ஒரு சகபயணி கத்த ஆரம்பிச்சிட்டார். அவர்கிட்டையும் அந்த கண்டக்டர் அதே ஸ்டைல்-ல பதில் சொல்லியிருப்பார் போல. அவருக்கும் இதே பிரச்சினை. எல்லோருக்கு மூச்சடைக்கிற மாதிரி வந்துடுச்சி. பஸ்சுக்குள்ள வேற வெப்பம் அப்பிடியே
காந்துது. ஒரு பத்து பேர் கெளம்பி டிரைவர்கிட்ட போயி வண்டிய ஓரங்கட்ட வச்சிட்டாய்ங்க. வேற வண்டி வந்தாதான் நாங்க வண்டியில ஏறுவோம், இல்லன்னா ரோட்டுலயே உக்காந்துருவோம்-னு பயணிகள் மிரட்டுனதால அந்த டிரைவர் டெப்போக்கு போன் பண்ணாரு.
அந்த முனைல இருந்து, ஒருத்தர் சொல்றாரு. ஏசி இல்லைங்கறத்துக்கு எல்லாம் இவ்வளவு பிரச்சினை பண்றீய்ங்களே, இதெல்லாம் ஓவரா இல்லையான்னு கேக்கறாரு. சாதாரண பஸ்ஸா இருந்தா பரவால்ல. ஜன்னலைத் தொறந்தா காத்து வரும். இது ஏ.சி வேற.
காத்தே உள்ள வாராதுய்யா! அதனால இன்னொரு பஸ்சு அனுப்புனாதான் ஆச்சுன்னு கண்டிசனா சொல்லிட்டாய்ங்க பசங்க (பயணிகள்தான். எல்லாம் வயசுப் பசங்க)

பத்தே முக்காலுக்கு நின்ன வண்டி, ஒன்னேமுக்கால் வரைக்கும் நிக்குது. அந்த மூணு மணிநேரமும் அந்த வண்டியோட என்ஜின அந்த டிரைவர் அமுத்தவே இல்ல. யோவ்! என்னாய்யா இது, என்ஜின ஆப் பண்ணமாட்டியான்னு கேட்டா, அந்த டிரைவர் 'ஆப் பண்ணினா மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முடியாது சார்'-னு சொல்றாரு.
அடப்பாவிகளா! டெப்போ-ல எப்புடின்னு கேட்டா அங்கயும் அப்படித்தானாம்!!!

ஆக தமிழ்நாட்டுல ஓடற பெரும்பாலான ஏசி வண்டிகளை ஆப் பண்றதே இல்ல. ரயில் என்ஜின் மாதிரி எப்பவும் ஆன்ல தான் இருக்கு. தேவைப் படும்போது ஆன் பண்ணிக்கிற மாதிரி அந்த ஸ்டார்டர்கள சரி பண்ணினாதான் என்ன? டீசல் சிக்கனம் தேவை இக்கணம் அப்புடின்னு இவிங்கதான் எல்லா பஸ்-லையும் எழுதி வைக்கிறாய்ங்க. இதுல இவ்வளவு டீசல சும்மா நிக்கற வண்டிகளுக்கு வீணடிச்ச்சா இதை விட கொடுமை உண்டா?
அரசாங்கமே இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கலாமா?

இந்தியாவுக்கான மொத்த எண்ணெய்த்தேவையில  70%க்கு மேல நாம இறக்குமதி பண்றோம். பெரும்பாலான பணம் எண்ணெய் இறக்குமதிக்கே சரியாப் போயிடுது. Approximately 30-35% of the GDP. இந்த நிலைமையில சும்மா நிக்கற வண்டிகளுக்கு டீசல் வேஸ்ட் பண்றத நிறுத்துனாலே
நிறைய பணத்த சேமிக்க முடியும். இதை அரசால ரொம்ப எளிமையா நடைமுறைக்குக் கொண்டு வரமுடியும்.

ஒன்னு முடிவு பண்ணிட்டேன்! இனிமே எஸ்ஈடி.சி-ல பயணம் பண்ணவே கூடாதுன்னு!   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Thursday, June 2, 2011

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சில கேள்விகள்

நேரடியாக  விஷயங்களுக்குப் போவோம். முன்னுரைகளெல்லாம் வேண்டாம்.

1. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களெல்லாம் டுபாக்கூர் என்று கத்திக் தீர்த்தீர்கள். அதன் பயன்பாட்டினை தடை செய்யக்கோரி  உயர்நீதிமன்றம் சென்றீர்கள் (Feb 20, 2001-http://www.hindu.com/2001/02/21/stories/0421223a.htm). இப்போது நீங்கள் பெற்றிருக்கும் வெற்றியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?



2. செப்டம்பர் 2003-ல் நீதியரசர் கனகராஜ் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய உத்தரவிட்டபோது Prosecutor ஐ நியமிக்காமல் உங்கள் ஆட்சி முடியும் வரை காலதாமதம் செய்தது ஏன்?



3. உங்களது கடந்த ஆட்சியில் முத்து, என்கிற,  எம்.ஜி.ஆரின் உதவியாளராக பணி புரிந்தவரை போதை மருந்து/கஞ்சா  வைத்திருந்ததாகக் கைது செய்தீர்கள். அந்த வழக்கு என்னவாயிற்று?



4. டான்சி வழக்கில் உங்களை தண்டிக்காமல் விடுவித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் உங்கள் மனசாட்சியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும் (She must atone her conscience-Justice Rajendra Babu on his verdict on 24-11-2003) எனக் கூறியது. அவ்வாறு கேட்டுக் கொண்டீர்களா? [BBC தொலைக்காட்சி பேட்டியின் போது, நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி கூட பேச மாட்டேன் என்றீர்கள். அதே வழியில்கூட இப்போது எஸ்ஸாகலாம்]



5. TN சேஷன் உங்களை ஒருமுறைக் கடுமையாக சாடியிருந்தார். அதற்குப் பிறகு ஒரு முறை அவரது தமிழக விஜயத்தின்போது மாநில விருந்தினர் மாளிகையில் தங்க இடம் மறுக்கப்பட்டது-இடம் இருந்தபோதும் கூட. அவர் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் அறை எடுத்திருந்தார். ஆனால் அந்த ஓட்டல் ரவுடிகளால் சூறையாடப்பட்டது. அதை செய்தது யார்?  [இருக்கவே இருக்கு “என் மேல் அன்புள்ளம் கொண்டோர் யாராவது அவ்வாறு செய்திருக்கலாம்” என்ற புதுப்பேட்டை பட வசனம்.] அதை செய்தவர்கள் மேல் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? 
உபதகவல்:

அவர் சென்னை வந்தபோது ஐந்து மணி நேரத்திற்கு டிராபிக் ஜாம் செய்யப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ஆணையிட்டும் கூட DGP அந்த டிராபிக்-ஐ குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



6. SPIC பங்குகளை விற்பதில் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு சந்திரலேகா இ.ஆ.ப, ஆவணக்காப்பகத்திற்கு மாற்றப்பட்டார். அதற்குப் பிறகு சுர்லா என்ற மும்பையை சேர்ந்தவன் சந்திரலேகா மேல் அமிலம் எறிந்தான். 

(‘Ms. V.Chandralekha, a young IAS Officer and chairman, Tamilnadu Industrial Development Corporation was severely burnt when acid was thrown on her face. She had refused to oblige Chief Minister Jayalalitha in a deal connected with the Tamilnadu I.D.C. Several I.A.S officers of Tamilnadu were horrified by the acid attack on Chandralekha’ in the book INDIAN DEMOCRACY- DERAILED POLITICS AND POLITICIANS by SRIKANTA GHOSH) 



ஒரு வழக்கு விசாரணையின்போது கோர்ட் வாசலிலேயே, ‘அமிலத்தை எறிந்ததற்கு காரணம் மதுதான்!’ எனக் கூறிச் சென்றான். அதனை ‘அவன் குடித்த மதுதான் காரணம்’ என்று அரசு வழக்கறிஞர்கள் திரித்தார்கள். உண்மையிலேயே அது மதுசூதனன் என்ற உங்களின் அமைச்சர்தானா?

மும்பையிலிருந்து வந்தவனுக்கு சாராயத்தை (Drinks) மதுவென்று அழைக்கும் அளவுக்கு தமிழ் தெரிந்திருக்குமா என்பது ஐயமே!



7. கோயம்புத்தூர் விமானநிலையத் திறப்புவிழாவினை முடித்துவிட்டு  வீடு திரும்பிக் கொண்டிருந்த C.K. குப்புசாமி MP, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். அந்த திறப்புவிழாவில் நீங்களும் இருந்தீர்கள். விழாவின் உங்கள் பெயருக்கு முன்னர் ஜனாதிபதியின் பெயரை விளித்துப் பேசினார். அதுதான் அவர் செய்த குற்றம். அவரை தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?



8. உங்கள் ஆட்சியில் நீங்கள் நூறு கோடியில் திருமணம் செய்து வைத்த  உங்கள் ‘வளர்ப்பு மகன்’ V.N.சுதாகரனை கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்கில் (13-06-2001) கைது செய்தீர்கள். செரீனா என்ற சின்னப்பெண் மீதும் கஞ்சா வழக்கு (09-07-2003) தொடரப்பட்டது. 

இவர்கள் இருவரும் கஞ்சா குடிக்கிகளாக அல்லது கஞ்சா விற்பவர்களாக இருந்திருக்கலாம். ஒருவேளை அந்த வழக்கிற்கப்புறம் அவர்கள் அந்த பழக்கத்தை/தொழிலை வீட்டுவிட்டார்களோ?

“கழுதை லத்தி போடுற வரைக்கும் கஞ்சா கேஸ் போடலாம்டி!”  என்ற கற்றது தமிழ் பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.



9. நாகப்பட்டினத்தில் ஒரு அரசு மேடையில், (13-10-2003) சோனியாவைப் பற்றி மணிசங்கர் ஐயர் பெருமையாக சொல்ல, நீங்கள் ‘ஐயர் இரண்டு வருடங்களுக்கு முன் நான் குருவாயூர் கோவிலுக்கு யானைக்குட்டி பரிசளித்ததைப் பற்றி எழுதினாரே! இப்போது என் முன் அதைச் சொல்ல தைரியமிருக்கிறதா?’ என்று கேட்க,  விழா முடிந்தவுடன் அவர் செல்லும் வழியில் தாக்கப்பட்டார். (http://www.hindu.com/2003/10/14/stories/2003101407610100.htm) நீங்கள் தாக்கச்சொல்லவில்லை என்றால், யார் சொன்னது? தாக்கியவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன?



10. போயஸ் கார்டனில் ஆடிட்டர் ராஜசேகர் என்பவர் தாக்கப்பட்டார்-செருப்பால். யார் அடித்தார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு நீங்கள் நலம் பெற வாழ்த்து சொல்லி பூங்கொத்து அனுப்பினீர்கள். அவரைத் தாக்கியவர்/தாக்கியவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன? தி.மு.க அரசு மகாதேவனைக் கைது செய்தது. அந்த வழக்கின் நிலை என்ன ஆனது? (Rajasekaran spoke to mediapersons today from his hospital bed in Egmore in Chennai on what he had stated in the FIR. He was at first reluctant to talk to the press. Later, he came out with details of what he called a ``terrifying experience'' which he charged took place in Jayalalitha's drawing room. ``I am very worried about my family. They (Jayalalitha, Sasikala and Mahadevan) openly threatened not only to ruin my life but also the life of my wife and 12-year-old son,'' claimed the 53-year-old chartered accountant, who says he served as auditor to Jayalalitha until a year ago-http://www.financialexpress.com/old/ie/daily/19990315/ige15027p.html)




11. ஸ்ரீநிவாசன் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டன. அடியாட்கள் அவரது வீட்டினை சேதப்படுத்தினார்கள். அவரின் புகார்களுக்கு உங்கள் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?



12. ஒரே கையெழுத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினீர்கள். (05-07-2003) அந்த வழக்கிற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றீர்கள். மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு அதனை ஒன்பது மாதங்கள் ஆராய்ந்து 9000 பேரைத் தவிர மற்றப் பணியாளர்களை பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என உத்தரவிட்டது. 2004 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அவர்களையும் பணியில் சேர்த்துக் கொண்டீர்கள். ஆக, அதுவரை நீதிபதிகள் செலவிட்ட நேரம், அரசு செலவிட்ட தொகை எல்லாம் வீணா? உங்கள் EGO-வின் விலை இத்தனை கோடியா? ஒரு லட்சத்துக்கு மேல் அரசுப் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கிய எதேச்சாதிகாரத்தை, உலகில் எங்காவது நடந்ததாக நீங்களே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 



13. சோனியாவை அந்தோனியோ மெய்நோ என விளித்தும், அவரின்  பதிபக்தியை சந்தேகிப்பதாகவும் கூறினீர்கள். DO YOU STILL STAND BY THAT?



14. முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி உங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சட்டசபையிலேயே கூறினீர்கள். பெண்களின் தகாத முறையில் நடந்து கொள்வதென்பது  ஒரு கிரிமினல் குற்றம், எனவே கவர்னர் எந்த வகையிலும் விதி விலக்கல்ல.  சென்னா ரெட்டி மேல் ஏன் வழக்கு தொடரவில்லை? 




15. சட்ட சபையிலேயே “ஆம்! நான் பப்பாத்திதான்” எனக் கூறிக் கொண்டீர்கள். ஒரு வேளை அது, தி.மு.கழக எம்.எல்.ஏக்கள் மீதுள்ள கோபத்தினால் கூறியிருக்கலாம் தெரியாமல்தான் கேட்கிறேன்! இந்த அளவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தத் தெரியாமல் இருக்கும் நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வரவேண்டும் என எங்ஙனம் கருதினீர்கள்?

16. இப்போது ஆயிரம் கோடி செலவு செய்து கட்டிய புதிய சட்டமன்றத்தை விட்டுவிட்டு, பழைய ஜார்ஜ் கோட்டைக்கே போகலாம் என்கிறீர்கள். அத்தனையும் மக்களின் வரிப்பணம். அந்தக் கட்டிடத்தை என்ன செய்வது? ஆயிரம் கோடி செலவு செய்து அதை மியூசியம் ஆக்குவது கொடுமையிலும் கொடுமை.



17. இவை எல்லாவற்றையும்விட கொடுமையான ஒன்று. நாவலர் நெடுஞ்செழியன்  உங்கள் காலில் விழுந்தாரே....... அம்மா, அது நீங்கள் விழ வைத்தீர்களோ அல்லது உங்கள் அடிப்பொடிகள் கட்டாயப்படுத்தினார்களோ,  உங்கள் நெஞ்சம் கூசவில்லையா? பதறவில்லையா? பதறித் தடுக்காமல் நின்று ஆசி வழங்கினீர்களே! அந்தோ!
 
சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்

இதையெல்லாம் நீங்கள் மறுக்கமுடியுமா?
    
18. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குண்டர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராய் KJ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது, அந்த மருத்துவமனைக்கு மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.


19. டான்சி வழக்கினைப் பற்றிய பேட்டியினை சுப்ரமணியம்சுவாமி சன் டிவியில் ரபி பெர்னார்ட் உடன் கொடுத்துக் கொண்டிருந்தபோது, தேனாம்பேட்டையில் (சன் டிவி பகுதியில் மட்டும் - அது மணிலாவிலிருந்து ஒளிபரப்பாவது தெரியாமல்) மின்சாரம் நிறுத்தப்பட்டது. 

அரசியல்வாதிகளின் அறிக்கைகளை மறுப்பதற்கே ஒரு குழுவினை வைத்திருப்பீர்கள். என் குற்றச்சாட்டை மறுப்பதா கஷ்டம்?
என் கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தாலும் இதை எழுதுகிறேன்! குறைந்தபட்சம் இதையெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்று உங்களுக்கும் உங்கள் அடிப்பொடிகளுக்கும்  ஞாபகப்படுத்தவாவது இது உதவட்டும்.

இலவசங்களைக் கொடுத்து தி.மு.க மக்களைக் கெடுத்துவிட்டது என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தீர்கள். தயவு செய்து ஒரு வேண்டுகோள். இலவசங்களைக் கொடுக்காமல் இந்த ஆட்சியை முடியுங்கள். 

குறிப்பு:
எனக்கு  தி.மு.க வை ஆதரிக்க வேண்டுமென்றோ, அ.தி.மு.க வை எதிர்க்கவேண்டுமென்றோ எந்தக் கட்டாயமும் இல்லை. எனக்கு எந்த கட்சி சார்பும் இல்லை. ஒரு சாமான்யனாகத்தான் உங்களுக்கு இந்தக் கேள்விகளைத் தொடுக்கிறேன்!

è