Sunday, October 18, 2015

பொல்லாததொரு பெண்பாவம்

அசுரர்களால் புலம்பெயர்க்கப்பட்ட
சீதைகள் சொல்வார்கள்.
'அவர்கள் எம்மைத் தீண்டவில்லை.
கரமைதுனம்தான் செய்துகொண்டிருந்தனர்' என்று.

பாவம்!


யோனிகளுக்குத்தான்
எவ்வளவு பெரிய பூட்டுகள்!

Friday, September 25, 2015

புணர்வின் விருப்பம்

வயலெட் இரவின் வெம்மையில்
வெளியேறி சென்று
கடற்கரையின் கற்கண்டு
 மணற்பரப்பின் மேல் கண்டெடுத்த
ஆணுறையின் மேல் உறுதியாக
கருநீல இரவில் மட்டும் புணர்வேன்
என்று ஓலமிட்டு சென்றான்.
அவை வரப்போவதில்லை என அறிந்தும்.

ஆயினும்

கற்றாழைகளை தன பெண்ணுறுப்பில்
இருத்திக்கொண்ட  அவள் கேட்டாள்!

ஆம்பிளையா இருந்தா வாடா!