Monday, February 14, 2011

காதலர் தினம்


உலகக் காதலர்களே! 
இன்று காதலர் தினத்தைக் கொண்டாடுகிறீர்கள். நன்று! 
இந்த நாளில் தமிழரின் அகவாழ்வைப் பற்றி சற்று அறிந்துகொள்ளுங்கள். தமிழ் இலக்கியங்கள் தமிழர் வாழ்வை அகம், புறம் என இரண்டாகப் பகுத்துள்ளது. அகவாழ்வில் இருவகையுண்டு. அது களவு, கற்பு என்பதாகும். களவு என்பது மணமாவதற்கு முன்னர் ஏற்படும் தொடர்பு. கற்பு என்பது  மணமான பின் உள்ள வாழ்வியல் நெறியாகும். 

காதல்  வந்தால் சொல்லி அனுப்பவெல்லாம் வேண்டியதில்லை. காதலைக் கண்டறிய  தமிழ் இலக்கியம் வழி வகைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறது.  பல அறிகுறிகளில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன். அவையாவன
 1 . பொன் முகம் மறைத்தல்
 2 . பொறி நுதல்  வியர்த்தல் 
 3 . நகு நயம் மறைத்தல் 
 4 . நாணிக்கண் புதைத்தல்        
 5 . நோக்குவை எல்லாம் அவையே போறல்             

காதல் வந்தால் பெண்கள் தன் இயற்கையான நாணத்தினால் அதனைப் பொதுவாக வெளிப்படுத்துவதில்லை. அந்நிலையில் காதலைக் கண்டறியவே இவ்வகையான குறியீடுகள். 
1  .காதல் வந்த பெண் தன் முகத்தை அதிகமாக தன் காதலரின் முன் காட்டமாட்டாள். 
2 . நீங்கள் அருகில் சென்றால் அவளின் நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளைக்கூட  பார்க்கமுடியும். 
3 . அதற்கும் மேல் மெல்ல தைரியமடைந்த பெண்மை, அருகில் வந்தாலும், உங்களின் அருகாமையால் ஏற்படும் மெல்லிய புன்னகையை மிகவும் பிரயத்தனப்பட்டு மறைப்பாள்.  
4 . அதற்கும் அருகில் சென்று பாருங்கள். அந்த வெட்கத்தால் தன் கண்களை இரு கைகளால் மூடி மறைப்பாள். 

5 . கடைசி அறிகுறி உங்களுக்கானது. நீங்கள் நோக்கும் எல்லாமும், உயர்திணை அஹ்றிணை  எல்லாமும் அவளின் முகமாகவே தோன்றும். இவையே காதலின் அறிகுறிகள். தோன்றினால் அதனை மகிழ்வுடன் எதிர்கொள்ளுங்கள். மாணிக்கவாசகர் போல புலம்பாதீர்கள்! 

A slightly negative-Alternative opinion 

No comments:

Post a Comment