Tuesday, February 15, 2011

மாணிக்கவாசகரின் கதை

மாணிக்கவாசகர் வாழ்ந்தது கொஞ்ச காலம்தான். அவர் மறைந்தபோது  அவருக்கு வயது 32. சிறந்த சிவபக்தர். 'நால்வர்' எனப்படுவோர்களில் இவரும் ஒருவர்.
மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். குதிரைப் படைகளுக்கு குதிரைகள் வாங்கும் பொருட்டு மன்னன் அளித்த பணத்தைக் கொண்டு திருப்பெருந்துறையில் உள்ள சிவன் கோவிலை புதுப்பித்துவிட்டார் மாணிக்கவாசகர். இதனை அறிந்த பாண்டியமன்னன் அவரை சிறையில் அடைத்தான். 
மாணிக்கவாசகரின் வேண்டுதலுக்கிரங்கிய சிவபெருமான், பாண்டியனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார். ஓநாய்களை எல்லாம் குதிரைகளாக மாற்றி பாண்டிய நாட்டுக்குள் கொணர்ந்து, அவையே மாணிக்கவாசகர் வாங்கிய குதிரைகள் எனவும், அவர் மேல் பிழை எனவும் கூற, பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவித்தான். அனால் அன்று இரவே, வந்திருந்த குதிரைகள்  எல்லாம் ஓநாய்களாக  மாறி லாயத்தில் உள்ள நிஜக்குதிரைகள் எல்லாவற்றையும் கடித்து தின்றன!  இது அறிந்து வெகுண்ட பாண்டியன் மாணிக்கவாசகரை மீண்டும் சிறையிலடைத்தான். 

பாண்டியனின் செயலால் சினமடைந்த சிவபெருமான், வறண்டு கிடந்த வைகை நதியில் பெருவெள்ளத்தை பொங்கச்செய்தார். வைகை நதியின் வெள்ளத்தை அடக்கிக் கட்டுப்படுத்த வீட்டுக்கொருவர் வரவேண்டும் எனப் பாண்டியன் ஆணையிட்டான். சிறையில் இருந்த மாணிக்கவாசகர்  பெருமானும் அணை வேலையில் ஈடுபடுத்தப்பட்டார்.
'வந்தி' என்னும் பிட்டு விற்கும் மூதாட்டிக்கு அணை வேலைக்கு அனுப்ப ஆள் யாருமில்லையாதலால், சிவபெருமான் அவளிடம் ஒரு  பணியாள் போல வந்து ' பணத்திற்கு பதில் பிட்டு கொடுத்தால் மண் சுமக்கத் தயார்' எனக் கூறவும் அந்தக் கிழவி சிவனை அணை வேலைக்கு அனுப்பினாள். சிவனோ எந்த வேலையும் செய்யாது பிட்டு தின்று விட்டு, உறங்கிப்போனார்.      

வந்தியின் வீட்டான் சோம்பேறியாகத் தூங்குவதாக பாண்டியனுக்கு தகவல் வரவே, காலாட்களை அனுப்பி சிவனை இழுத்துவரச் செய்தான் பாண்டியன். பிரம்பால் சிவனை பாண்டியன் முதுகில் விளாசவும், அங்குள்ள அத்தனை பேருக்கும் முதுகில் அடி விழ, சிவன் தன் காட்சி அளித்தார். மாணிக்கவாசகரை மீட்கவே, தான் இந்த திருவிளையாடல் புரிந்ததாகக் கூற- ததாஸ்து!
மாணிக்கவாசகர் தன்னை கடையேன் என்றும் பிறவி மோகம் கொண்டவன் என்றும், நாயேன் என்றும் பேயேன்  என்றும் தன்னைத் தானே இகழ்ந்து கொள்ளவதைக் கண்டால் அவர் உண்மையிலேயே அவ்வாறுதானோ- என்ற சந்தேகம் வாசகர்களுக்கு ஏற்படலாம். மாணிக்கவாசகருக்கு ஏற்பட்டது ஒரு வகையான Masochism . அவரின் சிவபக்தியை சிவனே கூட சந்தேகிக்க முடியாது. மாதர்களை நாடுவதாக எல்லாம் புலம்புகிறார் மாணிக்கவாசகர். ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. 
மாணிக்கவாசகர் குதிரை வாங்கும் பொருட்டு செல்லும் வழியில் திருப்பெருந்துறையில்  சிவபெருமான் அவருக்கு காட்சி அளித்ததாகவும், அவர் பணித்தவண்ணமே, மாணிக்கவாசகர் அந்தப் பணத்தை  கோவில் புதுப்பிக்கப் பயன்படுத்தியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. பாவம் மாணிக்கவாசகர்! எதைக் கண்டு இப்படி ஆனாரோ?
யாரும் என்னை சிவச்செல்வன்  என்று சந்தேகித்துவிடவேண்டாம். மாணிக்கவாசகரின்  கருத்துகளில் எனக்கு பல மாறுபாடுகள் உண்டெனினும் அவரின் தமிழுக்கு அடிமை நான் . இவ்வளவு நாட்களாக திருவாசகத்திற்கு என்னால் பதவுரை மட்டும்தான் எழுதமுடிந்தது. அதில் உள்ள தத்துவங்களை என்னால் அலசிக் கூறமுடியவில்லை.     

உண்மையிலேயே திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்தான் !

அடுத்தமுறை எழுதும்போது நீத்தல் விண்ணப்பம் முடிந்திருக்கும். சிறிது நாட்களுக்குப் பிறகு ஆண்டாளின் திருப்பாவைக்கு பதவுரை பார்ப்போம். ஆண்டாளின் தத்துவங்களையும் சற்று அலசுவோம். 

1 comment:

  1. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete