என் நண்பர் ஒருவரிடம் தமிழக தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கருத்து கேட்டேன்! அவர் சொன்னார்!
YEAH! IN A WAY, IT IS THE VICTORY OF DEMOCRACY! என்று.
சரிதான்! எனக்கொன்று புரியவில்லை! இது அ. தி. மு.க. வுக்கு கிடைத்த வெற்றியா? அல்லது தி.மு.க. வுக்கு எதிர்ப்பாக கிடைத்த வெற்றியா?அ.தி. மு.க. வுக்கு ஆதரவாக எனக்கு ஒரு விஷயமும் புலப்படவில்லை!
தி. மு.க. எதிர்ப்புக்கும் அவ்வாறே!
அ. தி. மு.க. தனது கடந்த ஆட்சியில் செய்தவை என்னென்ன? இரண்டு லட்சம்
அரசு அலுவலர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்தது, மழைநீர் சேகரிப்புத் திட்டம் கொண்டுவந்தது மற்றும் மது விற்பனையை அரசே ஏற்று, பட்டதாரிகளை ஊற்றிக்கொடுக்க வைத்தது தவிர? (கருணாநிதி, இன்னும் பல பேர்களை நியமித்தார்- நிறைய கடைகளைத் திறந்தார்).
வேறொன்றும் எனக்கு புலப்படவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயா என்ன செய்தார்?
நான்கரை ஆண்டுகளாக கொடை நாடு சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்தார்.
திடீரென்று வெளியே வந்து இரண்டு மாநாடுகளை நடத்தினார்.
கருணாநிதி, ஈழப் பிரச்சினையில் கைவிரித்ததை கண்டு ஜெயா, ஈழம் மலர வழி வகுப்போம் எனக் கூவினார்! நிற்க! பாராளுமன்ற தேர்தலின்போது மட்டும். இதே ஜெயாதான் புலிகளின் அரசியல் ஆலோசகரான தமிழ்செல்வனின் மரணத்திற்கு இரங்கல் கவிதையை படித்துவிட்டு over react செய்தது.
மூன்று முறை சட்டமன்றத்திற்கு வந்து தன் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுப் போனார்.
இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து ஜெயா கடந்தப் பத்து வருடங்களாகச் செய்தது.
ஒரு ரூபாய்க்கு அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், கூட்டுறவுக் கடன்கள் ரத்து, அவசர ஆம்புலன்ஸ் சேவை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் (ரூ. ஒரு லட்சம் வரை), இலவச கலர் டிவி, மழையில் ஒழுகா கான்கிரீட் வீடுகள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை, தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் மீதான தடையை நீக்கி, தடையால்
பாதிக்கப்பட்டோருக்கு, ஐந்து வருடங்களுக்கு வயது வரம்புச் சலுகை,
பல சப்-அர்பன் (துணை) நகரங்களை நிர்மாணித்தது, இன்னும் எத்தனையோ செய்த
கலைஞருக்கு எதிர்கட்சி வரிசையில் அமரும் தகுதியைக் கூட தர இந்த தமிழக மக்கள் தயாராயில்லை! இதுல இன்னொரு பய வேற வரப்போறான்! ஆண்டவா!
சட்டசபைக்கு வெளியவே பார் கேக்கறானாம் இந்தப் பய! இன்னும் ஒரே மாசத்துல இந்த ஜந்துவை அம்மா, உதைத்து வெளியே தள்ளிவிடும்! இவன் சினிமாவுல வில்லன உதைக்கிற மாதிரி! (அணுகவும்: டாக்டர் ஐயா அவர்கள்!)
கலைஞர் தவறே செய்யவில்லை என நான் கூறமாட்டேன்! இலங்கைப் போர் விவகாரத்தில் குறைந்தபட்சம்-என்னால் இயலாது- எனக் கை விரித்திருந்தால் கூட அது மறக்கப்பட்டிருக்கும். உண்ணாவிரதம், கடிதம் என கபட நாடகம் ஆடியதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
'SPECTRUM' விவகாரத்தைப் பற்றி நான் எதுவும் எழுதுவதை இல்லை.
அது ஊரே நாறிப் போன, உண்மையில் ஒன்றுமே இல்லாத, ஒன்று. அங்கு ஊழல் என்று ஒன்று நடைபெறவே இல்லை. இப்படித்தான் தீர்ப்பாகும் பாருங்கள். வளைக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. நேர்மையான தீர்ப்பே அவ்வாறுதான் வரும். ஏனென்றால் TRAI regulations- ல் உள்ள Social cause- Clause ன் படி 'First Come, First Serve' என்பது நியாயமே! அங்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம்! சாத்தியமே! ஆனால்
அதை தண்டிக்க முடியாது!
மற்றுமொன்று! 'Presumptive Loss' என்ற ஒரு கருத்தே தவறானது! இது எல்லோருக்கும் தெரியும்! சிபிஐ-க்கும் தெரியும்!
அலைக்கற்றை விவகாரத்தைப் பற்றிய பிரச்சாரத்தை நம்பி கருணாநிதிக்கு எதிராக வாக்களித்தோம் எனக்கூறும் வாக்காளர்கள் தீர்ப்பு வரும் நாள் அன்று தங்கள் முகத்தை உற்று கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும். எவன் சொன்னாலும் நம்பினேனே நான் ஒரு இளிச்சவாயன்தானே! என தன் பிம்பத்திடம் தானே உரையாடவேண்டும்!
எனக்கென்னவோ, ஈழவிவகாரம்தான் இந்தப் படுதோல்விக்குக் காரணம் எனப் படவில்லை! தமிழன் என்ற அடையாளத்தைத் துறக்க விரும்பும் மக்கள்தான் கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ்மண்ணில் வாழ்கிறார்கள். இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்! அவ்வாறான மக்கள் ஈழத்தில்கூட உண்டு. மறுப்போர்கள் தங்கள் மனசாட்சியிடம்தான் கேட்டுக்கொள்ளவேண்டும்.
இருக்கும் ஒண்ணு ரெண்டு பேரும், கத்தி கத்தி ஓஞ்சிப்போய்ட்டாங்க!
அப்படியென்றால் கருணாநிதியின் படுதோல்விக்குக் காரணம் என்ன? குடும்ப ஆட்சியா!?
அட பதர்களா!!! ஆள்றவனுக்கு குடும்பம்-னு இருந்தா அதுவும் வரத்தாண்டா செய்யும். இது இங்க மட்டுமில்ல! ஈரான்-ல, ஈராக்ல, பாகிஸ்தான்ல, மன்னர்கள் ஆட்சி செய்யும் நாடுகள்ல, லிபியாவுல, எகிப்துல, இவ்வளவு ஏன் அமெரிக்கா-வுல கூட வாரிசு ஆட்சி இருக்கத்தான் செய்யுது!
ஆமா! ஸ்டாலினுக்கு என்னதான் குறைச்சல். முப்பது வருஷத்துக்கு மேல
அரசியல்ல இருக்காப்ல! மிசா காலத்துல உதை வாங்கியிருக்கப்ல! இந்த
அனுபவத்தோட பல நாட்டு அதிபர்கள்கூட இல்லை-ங்கிறது தான் உண்மை!
ரவுடியிசம் அதிகமாயிருச்சி! எனக் குற்றம் சாட்டுவோர்களுக்கு ஒன்று சொல்கிறேன்! ஜெயா ஒண்ணும் புதுசா ஆட்சிக்கு வரல! ஏற்கனவே ரெண்டு தடவ பாத்துருக்கோம்! ரவுடிங்க எல்லாம் அந்தம்மா காலத்துல காந்தியாவா இருந்தானுங்க? எல்லாமும் எல்லா காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது!
கனிமொழி சொத்து வளைச்சிபோட்டுச்சி! அழகிரி அதைப் பண்ணினாரு! இதைப் பண்ணினாரு! அதனால்தான் மாத்தி வோட்டு குத்துனோம்-னு சொல்ற பசங்களுக்கு ஒண்ணு.
வளர்ப்புப் பையன்-னு சொல்லப்பட்டவனுக்கு முன்னூறு கோடி ரூபாய்ல கல்யாணம், ஒவ்வொரு எம்மெல்லேவும் ஒரு வாரத்துக்கு ஒரு கோடி பட்டுவாடா பண்ணியது, லண்டன்-ல ஒன்னு கொடைக்கானல்-ல ஒண்ணுன்னு ஹோட்டல், டான்சி நில விவகாரம் இன்னும் இதர பல ஊழல்கள்- இவையெல்லாம் யார்காலத்தில் நடந்தன? காலை ஒன்பதே முக்காலுக்கு தினமும் அண்ணா சாலையில் ஐந்து வருடங்களுக்கு போக்குவரத்தை நிறுத்தியது யார் காலத்தில் நிகழ்ந்தது?
கருணாநிதிக்கு குடும்பம் இருக்குது! அவங்க ஊழல் செஞ்சதா குற்றச்சாட்டு வந்தது! அம்மா ஆட்சிக்கு வந்தாச்சு! இனிமே மன்னார்குடி மாபியா அதை செய்யப் போகுது! இதே மாபியா ஏற்கனவே பத்து வருஷம் கொள்ளை அடிச்சது. எல்லாம் நம்ம மக்களுக்கு
மறந்துட்டுது!
பிளாட்டோ ஒன்று சொல்வார்! தன்னுடைய 'THE REPUBLIC' என்ற புத்தகத்தில்.
மக்கள் முட்டாள்கள்
கல்கி கூட தனது பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இதையே சொல்வார்! (நான்காவது பாகம்- ஆட்சியைப் பறிகொடுக்கின்ற கோபத்தில் கரிகாலன் பெரிய பழுவேட்டையரையரிடம் கூறும் வசனம்!)
அரிஸ்டாட்டில் ஒன்று சொல்வார்!
'COLLECTIVE WISDOM IS GREATER THAN INDIVIDUAL WISDOM' என்று.
இதில் நான் யாரை நம்புவது!
ஜனநாயகத்தின் வெற்றி எனக் கூறிய என் நண்பருக்கு நான் கூறிக்கொள்வது!
'இனிமேல் காணுங்கள் நண்பரே! YOU WILL HAVE TO WITNESS ALL THE MANIFESTATIONS OF ARISTOCRACY AND DECAYED FORM OF DEMOCRACY!
புதிதாகக் கட்டிய தலைமைச் செயலகம் ஜெயாவுக்குப் பிடிக்கவில்லையாம்!
மறுபடியும் அந்த வாடகைக் கோட்டைதான் வேண்டுமாம்!
இதுக்குப் பேருதான் அவாள் திமிரு!
குறிப்பு!
ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த சில சம்பவங்களான, முன்னூறு கோடி திருமணம், கும்பகோணம் சம்பவம் போன்றவற்றுக்கான புகைப்படங்களை இணையத்தில் தேடினேன்! எங்கும் கிடைக்கவில்லை! கிடைத்தது, அம்மாவின் போட்டோக்கள்தான்! அதில் சாம்பிளுக்கு ஒன்று!