Sunday, February 20, 2011

சட்டம் என் கையில்

                 
இந்தியர்களோட பாலியல் வறுமை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல. சில பல இடங்கள்-ல நானும் எழுதியிருக்கேன். இது ஆசிய மக்களுக்கு ரொம்ப பொதுவான விஷயம்.
பிரசாந்த்-ன்னு ஒரு டிரைவர். ஸ்கூல் பஸ் ஒண்ணுல டிரைவரா இருக்கான். இன்னிக்கி அவன் ரொம்ப Famous  ஆயிட்டான். டிவி-ல எல்லாம் காட்டறாங்க. பேட்டி எடுக்கறாங்க. அவனும் டாட்டா காட்டிக்கிட்டே போலீஸ் வேன்-ல ஏறிப் போறான். 

பிரச்சின இது தான். அவன் ஸ்கூல் புள்ளைங்க கிட்ட ஏதோ 'சில்மிஷம்' பண்ணிட்டான் போல. பாதிக்கப் பட்ட பொண்ணுங்களோ அழுதுக்கிட்டே 'அவன் என் கையத் தொட்டான். என் கன்னத்துல கைய வச்சான்' அப்பிடின்னு சொல்லுதுங்க. அதுக்கப்பறம் தானே இருக்கு கிளைமாக்சு. 

வீர தீர சூரப்புலிகள் கொஞ்ச  பேரு வந்தானுங்க. அடிச்சானுங்க பாருங்க நம்ம பிரசாந்த்த.... ஐயோ! அம்மா!- அவங்க அம்மாக் கிட்ட குடிச்ச பாலையெல்லாம் ரத்தமா கக்கிட்டான் அவன்.  (யார் கண்டது! பிரசாந்த், நம்ம சாரு மாதிரி களப்பணி செஞ்சிருந்தாலும் செஞ்சிருக்கலாம்.) 

அடிச்சவனோட ஒவ்வொருத்தன் மூஞ்சியையும் close -up ல காமிச்சான் டிவி காரன். என்னா ஒரு வெறி! அவன மடக்கி மடக்கி அடிச்சி எல்லா பயபுள்ளங்களுக்கும் விரலு வீங்கிடுச்சி போல. பிரசாந்த்தும் டிவி-க்கு பேட்டி குடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன்-க்கு கெளம்பிட்டான். 

எனக்கு இதிலிருந்து சில கிளைக்கேள்விகள் முளைக்கிறது. 
1 . சட்டத்தை கையிலெடுக்கும் உரிமையை இந்த தற்குறிகளுக்கு யார் வழங்கியது? 
2 . அவர்கள் அடித்த அடியில் அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகியிருந்தால் யார் மேல் போலீஸ் வழக்கு போடும்? 
3 .ஒவ்வொருவரும் தான் செய்வது சரி என்று எவ்வாறு தீர்மானிக்கின்றனர்? 
4 . பிரசாந்த்தை அடித்த மனிதருள்  மாணிக்கங்கள், மனித உருவில் தெய்வங்கள் யாரும் சின்னப் பெண்களை வக்கிரப் பார்வை பார்த்ததில்லையா? இதனை சத்தியம் செய்து அவர்களால் சொல்ல முடியுமா? 
5 . இந்த டிவி சீரியல் காலத்தில் நான்கு வயது பிஞ்சு கூட பச்சை பச்சையாகப் பொய் சொல்கிறதே! (காரணம் -Attention seeking Syndrome ). எப்படி ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் சொல்வதை அந்தக் கூட்டம் ஆராயாமல் அப்படியே நம்பியது?           
6 . சட்டத்தின் படி நீங்கள் நடந்துவிட்டால் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை கொடுக்க உங்களுக்கு உரிமை வந்துவிடுமா? 



அந்தக்கும்பல் அடித்ததில் பிரசாந்த் மண்டையப் போட்டிருந்தால்- நான் சொல்கிறேன்- அங்கு வழக்கே கிடையாது. அது ஒரு வெறி நாய்க்கும்பல் வந்து கடித்ததால் ஏற்படும் காயங்கள் போன்று. பிரசாந்த் ஒரு அனாதைப் பிணம்! அல்லவா! கூட்டமாக சேர்ந்து கொலை செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அல்லவா? குஜராத்தில் முசுலீம் பெண்களையும் ஆண்களையும் படுகொலை செய்த இந்துவெறி பிடித்த ஓநாய்களை இந்த அரசு என்ன செய்துவிட்டது?  காவி  நிறத்தில் தலையில் Scarf கட்டி ஒரு கையில் ரத்தம் தோய்ந்த வாளேந்தி வெறிக் கூச்சல் இட்ட ஒருவனின் புகைப்படம் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்ததே! அவனை அரசு கைது செய்ததா?  

இங்கு எவனுக்கும் ஒழுக்கம் இல்லை! நீதி இல்லை! (நீ பெரிய யோக்கியமா என்று எவனும் என்னை கேட்டுவிடாதீர்கள்! கேட்டவன் காது கொப்பளிக்கும் வரை சொல்லிக்கொண்டிருக்க எனக்கு ஒழுக்கமும் இருக்கிறது! நீதியும் இருக்கிறது! அதுவே என் சொத்து! என் கர்வம்!) தன் கருத்து சரியா, தவறா என்று உரசிப் பார்க்க ஒவ்வொருவனுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரைகல்லுக்கான தேவை இருக்கிறது. எனக்கு திருக்குறள்-பௌத்தம்- மற்றும் என் தாய் தந்தையின் போதனைகள். இந்த மூவற்றிலும்கூட தனித்தனியாகக் குறை இருக்கிறது. அவற்றில் சிறந்தது எதுவோ அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்! கடைபிடிக்கிறேன்! அப்படியான References இல்லையென்றால்தான், தான் நினைப்பதே சரி எனக் கருதும் தற்குறித்தனம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இது எளிதாக சரிப்படுத்தக்கூடிய வியாதி! தினம் அறநூல் படிக்கச் சொல்லி அடித்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும். 



பிரசாந்தை அடித்த அந்த மனிதருள் மாணிக்கங்களின் முகங்களை மிகக் Close - up ல் டிவி காரன் காட்டினான். எவ்வளவு கொலை வெறி? அந்த மனிதர்களை நான் ஒன்று கேட்கிறேன்! நீங்கள் யாரும் சிறு வயது பெண்களை தவறானக் கண்ணோட்டத்தில் பார்த்ததே இல்லையா? அடப்பாவிகளா!! இதே இந்தியாவில் 4-ல் ஒரு பெண்குழந்தையும் 7 -ல் ஒரு ஆண்குழந்தையும் பாலியல் வக்கிரத்துக்கு உள்ளாகிறார்கள். 8 வயது சிறுமியைக் கற்பழித்த 65 வயது கிழவனும்  உண்டு.  பிரசாந்த்தை அடித்த அந்த மனிதர்களின் முகங்களில் கோபம், கொலைவெறி இவற்றோடு (தான் மாட்டிக்கொண்டாலும் இவ்வாறுதானே அடிவிழும் என எண்ணுவதால் ஏற்படும்) லேசானத் தயக்கத்தையும் என்னால் காணமுடிந்தது.       

ஒரு வேலை காரணமாக சென்னையில் என் சக Bachelor  நண்பர்களுடன் ஒரு மாதம் வரை தங்கவேண்டி வந்தது. அந்த FLAT -ன் எதிர் FLAT -ல் குடியிருக்கும் குடும்பத்தில் ஒரு பெண்குழந்தை. LKG படிக்கும் சிசு. மழலைப் பேச்சு இன்னும் மாறவில்லை. என் நண்பர்களின் FLAT -க்கு அந்தக் குழந்தை விளையாட வரும். என் நண்பர்கள் மாலை நேரங்களில்   அக்குழந்தையிடம் விளையாடுவதும் உண்டு. ரொம்ப உரிமையாக அந்த FLAT -ல் வளைய வரும். அது ஒரு முறை வந்து எங்களிடம் சொன்னது- 'அங்கிள், எங்க அம்மா குளிக்கறத நீங்க பாத்திருக்கீங்களா? எங்க அம்மா குளிக்கப் போறத்துக்கு முன்னாடி இங்கதான் ************************'. எங்களுக்கெல்லாம் ஒரே shock .  என்னடா இந்த பாப்பா என்னன்னவோ சொல்லுதே என்று. நான் கூட நினைத்தேன்- சரி குழந்தை தெரியாத்தனமாய் சொல்கிறதோ என்று! பிறகுதான் அந்தக் குழந்தையை கவனித்தேன்! சிறு குழந்தைக்கான எதுவும் அதனிடம் இல்லை! பெரியத்தனமானப் பேச்சு- விளையாட்டு- பெரிய பெரிய வார்த்தைகள் என்று, தன் குழந்தைத்தனத்தை இழந்துவிட்டிருக்கிறது அந்த சிசு! நாம் யாராவது மழலைத்தனமாக பேசினால் அது சொல்லும்-'ங்கொய்யால! உங்களுக்கு பேசவே வராதா அங்கிள் ' என்று. 
என் நண்பர்கள் எல்லாம் சொக்கத்தங்கம்! அவர்களிடம் நான் ஒன்று சொல்லிவிட்டு வந்தேன்! இந்தக் குழந்தையை இனிமேல் வீட்டிற்குள் விடாதீர்கள். ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் இது உங்களை Character Assasination செய்துவிடும் என்று.  
அந்த சிசுவின் மனதில் எவ்வாறு நஞ்சு  ஏறியது? டிவி சீரியல், அம்மாவின் உரையாடல்கள், குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்- இவைதான்! 

சின்னக் குழந்தைகளின் பேச்சையே நம்பமுடியாமல் போனதற்கு யாரை குறை சொல்வது? கலி தான்! ஒரு ஸ்கூல் படிக்கும் பெண் சொன்னதைக் கேட்டு பிரசாந்த்தை குமுறிய கூட்டத்தில் சேர்ந்து அடித்த ஒருத்தனின் மகன் இவ்வாறு சின்னப் பெண்ணிடம் சேட்டை செய்தான் என்ற  குற்றச்சாட்டில்  அடிவாங்கி வந்தால் அவனுக்கு மிகப் பெருமையாகவா இருக்கும்? ஏன் அந்த பெண் அந்த டிரைவரை  காதலித்திருக்கக் கூடாது? ஏன் அவன் அதை மறுத்திருக்கக் கூடாது? ஏன் அந்த கோபத்தில் அந்த சின்னப் பெண் அவன் மேல் குற்றம் சாட்டியிருக்கக் கூடாது? இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையா என்ன? அதான் இந்தமாதிரி scene எல்லாம் டிவி சீரியல்-ல காட்டுறானே! 


சட்டத்தின் படி தான் நடந்துவிட்டால், அவ்வாறு நடவாதவனை கண்டிக்கும் அல்லது தண்டிக்கும் உரிமை தனக்கு வந்து விட்டதாக எண்ணும்  தற்குறித்தனத்தை என்னவென்று சொல்வது? இதனை நீங்கள் ரோட்டில் அடிக்கடிப் பார்க்கலாம். நீங்கள் Wrong route -ல் போய் சரியான ரூட்டில் வருபவனை லேசாக மோதிவிட்டால் போதும். அவன் முறைப்பான் பாருங்கள்...... அடடடடடா! ஏனென்றால் சட்டம் அவனுக்கு பெரிய பலத்தைக் கொடுப்பதாக அவன் எண்ணிக் கொள்கிறான்! 
இதே அவன் தவறான ரூட்டில் வந்து மோதிவிட்டால் நாய் தன் பின்னங்கால்களுக்கிடையில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடுவதுபோல் ஓடிவிடுவான்! அல்லது எதிர்ப்புக் குரல் கொடுத்தால் கூட அதில் ஒரு தாழ்வுணர்வு இருக்கும். ஏனென்றால் சட்டம் அவனுக்கு ஆதரவாக இல்லை.  அதாவது support இருக்கும் தைரியத்தில் குரைக்கும் நாய் போல!- (அந்நியன் படம் கூட ஷங்கர் எடுத்த நாய்ப்படம்தான்- ராமநாராயணன் படத்துக்கும் அந்நியன் படத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை)

சட்டத்தின் ஆதரவு அவ்வளவு வலிமையைக் கொடுக்கிறது மனிதனுக்கு. 


வேண்டுமானால் இந்தியாவில் உள்ள கிரிமினல் சட்டங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம்- பிரசாந்த்தை மடக்கி மடக்கி அடித்தார்களே, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு டஜன் பெண்களையாவது கற்பழித்திருப்பார்கள்.  ஐந்து முதல் பத்து கொலைகளையாவது செய்திருப்பார்கள். சட்டம் ஒன்றே அவர்களை எல்லாம் அடக்கி வைத்திருக்கிறது என நானும் அறிவேன். 


ஆனா! 


சட்டம் எப்போ வேணும்னாலும் வளையும்டா பைத்தியக்காரா! எப்பிடி வேணும்னாலும் வளைச்சிக்கலாம்டா மூதேவி! ஸ்டேட்-க்கு  ஒரு சட்டம்! நாட்டுக்கு ஒரு சட்டம்டா! எதுவுமே தெரியாம 'சட்டம் ', 'சட்டம்'னு குதிக்கிறியேடா  கிறுக்கா!     


தான் இயற்றிய அத்தனை சட்டங்களையும் தானே பல முறை மீறாத அரசுகள் இந்த உலகில் ஒன்றைக் காட்டுங்கள் எனக்கு! அன்றே நான் இந்த உலகப் பிரஜா உரிமையை துறக்கிறேன்!  

சட்டம், அரசாங்கம், போலீஸ், பள்ளிக்கூடங்கள், ராணுவம், நீதிமன்றம் ஆகியவை எல்லாம் பாசிசத்தின் கருவிகளே! இருப்பியல்வாதத்தின் எதிரிகளே! (இதன் அர்த்தம் புரியாதவர்கள்- எனக்கு மெயில் செய்யவும்- jamsarain@gmail.com) 

பிரசாந்த்-ஐ போலீஸ் கைது செய்து கூட்டிட்டு போய்ட்டுது! அவன அடிச்சவனெல்லாம்  பக்கத்துவீட்டு சின்னப்பொண்ண சைட் அடிக்கப் போய்ட்டானுங்க! 
பிரசாந்த்- உண்மையிலேயே  நல்லவனாக இருந்தால்- இன்று நடந்த சம்பவம் இரு விளைவுகளில் ஒன்றை மட்டுமே உண்டாக்கும். 

ஒன்று. 

பிரசாந்த்தின் தற்கொலை- ஜெயிலில் அல்லது வெளியில் வந்த பிறகு.

இரண்டு. 
ஒரு பெண் வெறுப்பாளனாக-பெண் வெறியனாக- Rapist -ஆக பிரசாந்த் மாறுவது. 

குறிப்பு:

1 .இந்தக் கட்டுரை நுணுக்கமான பாலியல் பிரச்சினையை முன்வைக்கிறது. என் பதப் பிரயோகங்களில் நான் மிகக் கவனம் எடுத்துக் கொண்டிருந்தாலும், சில,  வரம்பு மீறியிருக்கலாம். 
2 . இதை படிக்கும் பெண்கள் தவறாகக் கருதவேண்டாம்! நான் பெண்ணிய எதிர்ப்பாளன் அல்லேன்!
3 . பெண்ணியக் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது!     

1 comment: