Tuesday, February 1, 2011

எழுத்தாளருக்கும் இயக்குனருக்கும் சண்டை



கொஞ்ச நாளாக எழுத்தாளர் சாருநிவேதிதாவுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் சண்டை. அது என்னவென்று பார்ப்போம். 

சாருவின் 'தேகம்' என்ற நாவல் வெளியீட்டு விழாவுக்கு அவர் இயக்குனர் மிஷ்கினை அழைத்திருந்தார். ஆனால் மிஷ்கினோ அந்த நாவலைப் பற்றி ஒரு உண்மையை கூறிவிட்டார். அதுதான் இந்த சண்டையின் ஆரம்பம். அவர் சொன்ன வார்த்தை 'தேகம்' நாவல் ஒரு சரோஜாதேவி புத்தகம் என்பதே! இந்த ஒரு விமர்சனத்திற்காக சாரு தன் வலைமனையில் 25-க்கும் மேல்  அத்தியாயம் போட்டு மிஷ்கினை திட்டிக்கொண்டிருக்கிறார். முதலில் இது படம் ஓடவும் நாவல் விற்பனை ஆகவும் நடக்கும் stunt   எனக்கருதினேன். ஆனால் சாரு பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. 

சாரு அவர்களே! உங்களுக்கு தமிழ், இந்திய சமுதாயத்தைப் பற்றி நன்றாக தெரியும்! இது பாலியல் ரீதியாக வறண்ட சமூகம். அதற்கு ஒரு வடிகாலாகத்தான் உங்கள் எல்லா நாவல்களும் அமைந்திருக்கின்றன! இது பற்றி நீங்கள் பெருமைப்படுங்கள்! மிஷ்கின் சொன்னதில் தவறொன்றும் இல்லை. சரோஜாதேவி புத்தகங்களிலும் தவறேதும் இல்லை. 

நீங்கள் உயர்ந்த இலக்கியம் எழுதுவதாக கருதிக்கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் நீங்கள் எழுதும் நாவல்கள் பற்றி உங்கள் மனசாட்சிக்கே தெரியும். கெட்ட  கெட்ட வார்த்தைகளில்  நாவல் எழுதிவிட்டு, தண்ணி அடிச்ச கதையையும் களப்பணி செய்த கதையையும் எழுதிவிட்டு அதனூடே கவிதை ரெண்டையும் உபநிஷத்துகளையும் எழுதிவிட்டால் உங்களுக்கு நோபல் கொடுத்துவிடுவார்களா என்ன? அது உயர்ந்த இலக்கியம் ஆகிவிடுமா?   பிறகு  ஏன் இந்த over reaction? ஊருப்பட்ட அரசியல் இந்த உலகத்தில் இருக்கும்போது நீங்கள் பாலுறுப்புகளின் அரசியலைப் பற்றி (The Politics of the Genitals ) ஏன் எழுதவேண்டும்? மொழிமாற்றம் செய்ய ஆயிரம் விஷயங்கள் இருந்தும் ஏன் நீங்கள் 'The Story of the Eye '- ஐ மொழிமாற்றம் செய்ய வேண்டும்? George Bataille சிறந்த படைப்பாளி தான். சந்தேகமில்லை. ஆனால் கண்ணின் கதையை  மொழிமாற்றம்  செய்ததற்கு காரணம் என்ன? 'Sex Sells ' என்ற காரணத்தைத் தவிர வேறென்ன? அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு ரசிகர் வட்டம் இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்!


வேறு விஷயமா இல்லை  இந்தியாவில்?  நீங்கள் இருப்பது இந்தியாவில் சாரு!! 
லத்தீன் அமெரிக்க நாவல்களில் வருவதையெல்லாம் இங்கு செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள்! அது கற்ற சமூகம். பாலுறுப்புகளைப் பற்றி ஸ்பானிஷில் அல்லது பிரெஞ்சில் எழுதுங்கள். 

மிஷ்கினைப் பற்றியும் சொல்லியாகவேண்டும்! 
அவரது அஞ்சாதே படம் பாருங்கள்! அவரது  குட்டு வெளிப்பட்டுவிடும்! (நந்தலாலா படம் ஜப்பானிய படமான 'கிக்குஜாரோ' வின் அப்பட்டமான காப்பி) 

என்னவோ அவர்தான் உலக இயக்குனர்களிலேயே சிறந்தவர் மாதிரி அவர் பீற்றிக்கொள்ளுவது.... அய்யோ சாமி! முடியல!  நாலு புத்தகம் படிச்சிட்டா போதுமா சாமி?! 

தன் 'அஞ்சாதே' திரைப்படத்தைப் பற்றிய கேள்விகள்  சிலவற்றிற்கு மிஷ்கின் பதில்  சொல்லியாக வேண்டும்!
  • குருவி என்ற கதாபாத்திரம் ஏன் தன் ஊனமான கையை அதிகமாக ஆட்டிப் பேசுகிறது? மற்ற கையை ஏன் அதிகமாக பிரயோகிப்பதில்லை?
  • குடிப்பவன் தாடி வைத்திருப்பான்- நல்லவன் தாடி வைக்க மாட்டான் என எப்படி நீங்கள் காட்சி வைத்தீர்கள்? Hero குடிகாரனாக  இருக்கும்போது அவனுக்கு தாடி இருக்கும்! அவன் நல்ல நிலைமைக்கு வரும்போது போது தாடி இருக்காது! இது எப்படி? 
  • தன் Boss -இடம் இருந்து -(ஆஸ்பத்திரியில் இருந்த குற்றவாளி இறந்துவிட்டான் என) அழைப்பு வரும்போது ஏன் ஹீரோ தான் உண்ணும் உணவின் மேலேயே கை கழுவுகிறான்? இது மனுதர்ம கோட்பாடு அல்லவா? (மனுதர்ம கோட்பாட்டின்படி உணவு உண்ணும்போது அதை கை கழுவி விட்டால் அதை திரும்ப உண்ணக்கூடாது. உண்ண சொல்லி யாரும் வற்புறுத்தவும்  கூடாது!) 
  • அந்த Inspector General -ஐ ஒரு தலித் - ஆக காட்டிய காரணம் என்ன!- இந்த கேள்வியை நீங்கள் எளிதாக மறுக்க முடியும்! இருந்தாலும் உங்கள் மனசாட்சிக்கே அது தெரியும்!   
  • ஏன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒரு சைக்கோ -வைப் போல் நடந்து கொள்கின்றன?

இதற்கு விளக்கங்களை நான் கொடுக்கிறேன்! 
  • குருவி பாத்திரம் தன் ஊனமுற்ற கையை ஆட்டி பேசுவதற்கு காரணம்- அந்த பாத்திரத்தை பொது பாத்திரத்தோடு நீங்கள் கலக்க முற்பட்டதே! இது சாதாரணம். மாற்றுத்திறனாளிகளின் உளவியலை நீங்கள் படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். அதனால் அவன் குடிப்பது போலவும் ரவுடி போல நடப்பது போலவும் காட்சி வைப்பதா?! குருவி பாத்திரம் தன் ஊனமுற்ற கையை ஆட்டி ஆட்டி பேசுவதற்கு காரணம் அவன் ஊனமுற்றவன் என்று மக்கள் மனதில் பதிய நீங்கள் மேற்கொண்ட முயற்சியே ஆகும். இது வக்கிரம் அல்லவா?  இது உண்மையாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்முறையே! 
  • இரண்டு மற்றும்  மூன்றாவது கேள்விகளுக்கு பதில்- நீங்கள் ஒரு Cliche -வுக்கு தப்பாத இயக்குனர் என்பதுதான்! இதற்கும் P.வாசுவின் தாலி சென்டிமென்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! 
  • அந்த IG பாத்திரத்தை தலித்-ஆக காட்டியது மட்டுமல்லாமல் அதில் ஒரு லேசான கிண்டலை இழையோடவிட்டிருக்கிறீர்கள்! இது உங்களின் வருணாசிரமப் பற்றினைக் காட்டுகிறது என்று நான் குற்றஞ்சாட்டினால் உங்களால் மறுக்க முடியுமா மிஷ்கின் அவர்களே!    
  • உங்கள் கதாபாத்திரங்கள் சைக்கோக்களைப் போல் நடந்துகொள்ளக் காரணம் என்னவென்றால்- நீங்கள் Sub-human, அல்லது super human பாத்திரங்களை ரசிப்பதை இன்னும் விடவில்லை என்பதே! காமிக்ஸை விட்டு வெளியே வாருங்கள் மிஷ்கின்! இது இயக்குனர் பாலாவிற்கு பொருந்தியது! ஏனென்றால் அவர் படமெடுத்த காலம் அப்படி! இப்போது அது செல்லாது மிஷ்கின்! இன்னும் சொல்லப்போனால் பாலாவுக்கே கூட அது இனிமேல் செல்லுபடி ஆகாது! 


எழுத்தாளர் சாருவிற்கு- புத்தகங்களுக்கும் கூடிய சீக்கிரம் சென்சார் வரப்போகிறது! அப்பொழுது தெரியும். உங்களின் கதி! உடனே பாசிசம் என்று குதிக்கவேண்டாம்!


இது பாசிசம் அல்ல! மக்களுக்கு, அவர்களுக்குத்  தேவையான இலக்கியத்தை கொடுக்கும் முயற்சி! அல்லது தேவையில்லாததைத் தடுக்கும் முயற்சி!                                                                                             

No comments:

Post a Comment