Thursday, March 1, 2012

எழுச்சியின் ரகசியம்



'ம்' என்ற ஒற்றை சொல்லுக்கு
ஏறியது அந்தக் கயிற்றுப் பாம்பு
வேகம் பெற்று சீறியது
ஐந்தடி உயர மனிதம் பெற்று


கண்டோர் வியந்தார்
சிலர் காசுகளைப் போட்டனர்
சிலர் சாபங்களை இட்டனர்
சிலர் கயிற்றில் பொதிந்த மர்மம் தேடி
எழுந்தக் கயிற்றை ஆராய்ந்தனர்

மகுடி வாய் கயிற்றின் இழைஇடை
முதலியன நோக்கப்பட்டன.
கயிற்றின் மேல் அவனுக்கு இருந்தக்
காதலைத் தவிர!!!