Wednesday, March 16, 2011

பட்ட காலிலே படும்

ஜப்பானிய சுனாமி உண்டாக்கிய பேரழிவுகள் தொடர்கின்றன. இயற்கைக்கு ஏன் ஜப்பான் மேல் இப்படியொரு கோபம்? கால்கோள்களும் பிரளயங்களும் புராணங்களில் படித்ததோடு போய்விடக்கூடாதா? 2004 -ல் இந்துமாக்கடலில் ஊழித் தாண்டவம். இப்போது பசுபிக் பேராழியில்.  

சுனாமிகள், ஜப்பானுக்கு புதிதல்ல. சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானிய மொழியிலிருந்து தோன்றியதுதான். ஆனாலும் 8.9 ரிக்டர் பூகம்பம் சற்றே வழக்கத்துக்கு மாறானது. ரிக்டர் அளவை என்பது ஒரு Lograthmic Scale . அதாவது  9 ரிக்டர் என்பது 8 ரிக்டர் அதிர்வைப் போல 31 .5 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.  
0 .2 என்பது 0 .1 ரிக்டரை விட 3 .15 மடங்கு சக்திவாய்ந்தது. 


பொதுவாக கடலின் ஆழமும் பரப்பும் அதிகமாயிருப்பின், நிலநடுக்கங்களாலும், கடலினுள் ஏற்படும் நிலச் சரிவுகளாலும் தோற்றுவிக்கப்படும் ஆற்றல் அந்தக் கடலின் நீருக்குள்ளேயே கிரகிக்கப்படும். அதனை மீறிய ஆற்றலையே அது ஆக்ரோஷ அலைகளாக வெளிப்படுத்தும். பசுபிக் பேராழி உலகின் பெரிய பெருங்கடல். அதன் விரிந்த பரப்பையும் மீறி சுனாமியாக,  நிலநடுக்கத்தின் ஆற்றல் வெளிப்பட்டதென்றால், அந்த பூகம்பத்தின் வீரியம் எவ்வளவு இருந்திருக்கும்? 

ஜப்பானிய சுனாமி, வெறும் கடலலைகளோடு நிற்காமல்,  மிக மோசமான விளைவுகளையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது. 

ஜப்பானிய அணு உலைகளில் நான்கை அது போட்டுத் தள்ளிவிட்டு போய்விட்டது.  புகுஷிமாவில் மட்டும் 4 அணு உலைகள் வெடித்துவிட்டன. அணு உலைகள் கட்டுப்பாடற்று வெடிக்கிறது என்றால் அது அணு குண்டேதான்.  கட்டுப்படுத்தப்பட்ட அணுகுண்டே அணு உலை. அந்த வெப்ப ஆற்றலைக் கொண்டு நீராவியை உற்பத்தி செய்து Turbine -ஐ சுழலச் செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக, இப்போது ஜப்பானில் வெடித்துள்ளது நான்கு அணுகுண்டுகள்.  ஐயோ! அம்மா!


சாதாரணமாக மனிதனால் பொறுத்துக் கொள்ளக் கூடிய கதிரியக்கத்தைவிட 1000 மடங்கு அதிகக் கதிரியக்கம் இப்போது அந்த அணு உலைகளின் காம்பவுண்டுக்குள் நிலவுகிறது. அதுவே வெளியே 800 மடங்கு. 

சுனாமி வருவது ஜப்பானுக்கு புதிதல்ல என்பதால், அந்த அணு உலைகலெல்லாம் மிகுந்த பாதுகாப்புடனேயே வடிவமைக்கப்பட்டன என்றாலும் கூட இந்த விபத்தினைத் தவிர்க்க முடியவில்லை. இத்தனைக்கும்  உலக அணு ஆற்றல் கழகத்தின் (IAEA)பாதுகாப்பு விதிகளை முழுமையாகக் கொண்டது புகுஷிமா அணு உலைகள். 

இந்தியாவில் இருக்கும் ஒரு அணு உலைகூட IAEA -வின் தரக்கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் கல்பாக்கம், தாராப்பூர், கோட்டா (ரவட்பட்டா), கைகா, காக்ரபூரா, நரோரா ஆகிய இடங்களில் அணு உலைகள் உள்ளன. கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நான்கு Light water reactors கட்டப்படுகின்றன. இவற்றில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படக்கூடியவை கல்பாக்கம், கூடங்குளம் மற்றும்  நரோரா ஆகிய இடங்களில் உள்ளல அணு உலைகள். கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் சுனாமியால் ஆபத்துகள் நேரலாம். ஏற்கனவே ஒரு பிரளயம் வந்து ஒரு காட்டு காட்டிவிட்டு சென்றுவிட்டது.      

கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு உலைகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் நான்கு வருவதற்கான ஒப்பந்தங்களும் Feasibility report -ம் தயாராகிவிட்டன.  

நரோரா, இமய மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு ஊர். இந்தியப் புவித்தட்டும், யூரேஷியத்தட்டும் மோதிக்கொள்ளும், எப்போதும் அதிர்ந்து கொண்டும் உள்ள ஒரு பகுதி நரோரா. அங்கே வெறும் வலுவான ஒரு பூகம்பம் போதும், அந்த அணு உலையைத் தகர்க்க. அப்படிப்பட்ட வலுவான பூகம்பம் இதுவரை இமயமலை   அடிவாரத்தில் இன்னும் வரவில்லை என்றாலும், அது வரும் வரை நாம் காத்திருக்கக்கூடாது.

இந்தக் கொடும போதாதுன்னு, நம்மாளுங்க Nuclear Liability  மசோதா வேற போட்ருக்காங்க. அதன்படி, ஒரு வேளை ஏதாவது அணு உலை வெடிச்சதுன்னா, அந்த அணு உலைக்கு சொந்தக்காரன், ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல (ரூ.5000 கோடி) நஷ்ட ஈடா குடுக்க வேண்டியதில்ல-ங்கற சட்ட வரைவு.  இந்த சட்ட வரைவு எதுக்குன்னா, அப்பத்தான் அமெரிக்காகாரன் இங்க வந்து அணு உலை கட்டுவானாம்.  இது எப்டி இருக்கு? 

செத்த நாய் மேல எத்தன லாரி ஏறுனா என்னப்பா? 

இந்திய- அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத்தின்படி அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்குள் அணு உலைகளைக் கட்டிக்கொடுக்கும். அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகளும் அளிக்கப்படும்.  

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், தானும் கேட்டுக் குட்டிச்சுவராய்ப் போன நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துவிடும் போலிருக்கிறது. ஏகாதிபத்தியம் என்பது ஒரு ஒட்டுவார் ஒட்டி. 
ரத்த வெறிபிடித்த அமெரிக்க ஓநாய்கள் வீசிய அணுகுண்டுகளைத் தாங்கிய ஜப்பான், இன்று தன் அணு உலைகளாலேயே ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது! அமெரிக்க அணுகுண்டுகளால் வெளிப்பட்டக் கதிரியக்கத்தால் இன்னும் உடல் ஊனமாக, வெறும் தசைப்பிண்டமாகப் பிறக்கும் சிசுக்கள் ஏராளம்.  இப்போது மீண்டும் அணுக கதிர்வீச்சின் உக்கிரம். சுனாமியின் தாக்குதல் ஒரு சில நிமிடங்கள்தான்! அணுக்கதிர் வீச்சு ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடிக்குமே! நினைத்தாலே மனம் பதறுகிறது. 

ஜப்பான் மீண்டு வர, மரித்த உயிர்களெல்லாம் அமைதி பெற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுவோம். இயற்கையின் சீற்றத்தை தடுக்க மறந்த, கடவுள்களுக்கெல்லாம் திவசம் செய்வோம்!

இன்று ஜப்பான்! நாளை இந்தியாவாக  இருக்கலாம்! அப்படி ஒன்று நேர்ந்தால், தமிழ்நாடே சுடுகாடுதான்  மக்கா! ஜாக்கிரதை! 

Friday, March 11, 2011

பெங்களூரு-ன் வாகன நெரிசல்

பெங்களூரு  ஒரு மில்லியன் நகரம். அதாவது பத்து  லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் ஒரு நகரம். இந்த மாதிரியாக இந்தியாவில் 35 நகரங்கள் உள்ளன (கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி). அதை விட முக்கியமான தகவல், இந்தியாவிலேயே அதிகமாக இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் உள்ள நகரம் பெங்களூரு. 


Monday, March 7, 2011

புறக்கணிப்பின் சுவை


இரத்தம் சிந்தும் இதயங்கள் 



கடந்து போகும் ஆம்புலன்சுகள் 
கரிய தார் சாலையை சிவப்பாகிக் 
கிடக்கும் தலை நசுங்கிய பிரேதங்கள் 

வன்முறை நிறைந்த ஆங்கிலப் படங்கள் 
சித்திரவதையை விளக்கும் சித்திரங்கள் 
இதுவரை பாதித்ததே இல்லை என்னை 

எளிமையாகக் கடந்திருக்கிறேன் 
எதையும் உணர்ந்ததில்லை 

ஆம்  
மரண வலி உணர்ந்ததில்லை நான் 
மரத்துக் கிடந்திருக்கிறேன் 
இன்று வரை!

சிதறுண்ட கண்ணாடித் துகள்கள் 
அறிகின்ற பாதங்கள் 
நெருப்புக் குழம்பின் ஒரு மிடறு 

கோடி சிற்றெறும்புகளின் கொட்டல் 
அறுக்கப்படும் உயிர்நாடி 
பிசுபிசுத்தோடும் வெங்குருதி 

பந்தியின் நடுவில் விரட்டப்படும் அவமானம் 
மணிமேகலையின் மறுப்பு 
விலாவில் செருகிய குறுங்கத்தி 


உயிர் வலியை உணர்ந்தேன் இன்று 
அந்த செல்பேசி அழைப்பு 
நிராகரிக்கப்படும்போது  

புறக்கணிப்பின் சுவை பாகல். 
கசந்து போன இணை 




Thursday, March 3, 2011

வாசகியின் விருப்பம்

'ஆண்டியப்பர் மட்டும் அன்று இரவுக் காட்சிக்குப் போயிருந்தால்'- ஆ.ராசாவுக்கு எதிராக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு இது. எங்கே தெரியுமா? சவுக்கு இணையதளத்தில். 
சுத்தமான, தலித்தியத்தின் எதிரான ஒரு இணையதளமே சவுக்கு! 

எனக்கு ஒரு வாசகி சவுக்கு இணைய தளத்தின் முகவரியை இன்னொரு வாசகியின் மூலம் அனுப்பியிருக்கிறார். பெயர் வேண்டாம்.  படிச்சிட்டு ஆடிப்போயிட்டேன் ஆடி!   அவருக்கு நான் சொல்லும் பதில் இதுதான்!

தயவு செய்து என்னை தி.மு.க. தொண்டன் என்று எண்ண வேண்டாம். அது என்னை அவமதிப்பது போலாகும். தி.மு.கழகத்தின் அடிமட்டத் தொண்டன் முதல் மேல்மட்டத் தலைவர்கள்  வரை அத்தனைபேரின் தரம் என்ன   என்பதை நான் அறிவேன்! இது ஒரு பொதுப்படுத்தப்பட்டக் கருத்து.   

சர்க்காரியா கமிஷன் என்பது மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட ஒரு ஆணையம். அதற்கும் கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். இதனை 'சவுக்கு' ஒரு Quote ஆகப் பயன்படுத்தியது சோகமானது. இது அவர்களின் அறியாமையையேக்  காட்டுகிறது. 

ஒருத்தன் ஒரு பொண்டாட்டி வைத்திருக்கிறானா? ரெண்டு மூணு வைத்திருக்கிறானா? என்பதை ஆராய்வதா இலக்கியம்? வேணும்னா ஒரு பொண்ணு ரெண்டு மூணு புருஷன வச்சிக்கட்டும்- யாரு வேணாம்னா? 

கருணாநிதி, ராசாத்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'என் துணைவியார்' என்றேக் குறிப்பிட்டுள்ளார். மனைவி என்று ஒருநாளும் குறிப்பிட்டதில்லை. துணைவிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் என ஆராய்வதற்கு நமக்கு நேரமில்லை. அந்த விளக்கங்கள் எல்லாம் நமக்கு அவசியமும் இல்லை. 

இந்து திருமணச் சட்டப்படி ஒரு இந்து தன முதல் மனைவியின் சம்மதத்தோடு இன்னொரு மனைவியை மணமுடிப்பதில் எந்த பிழையுமில்லை. நிற்க! ராசாத்தி மனைவி அல்ல! துணைவி! 

உலகத்தில் எந்த நாட்டின் சட்டமும் வைப்பாட்டி வைத்துக்கொள்வதை  தவறு எனச் சொல்வதே இல்லை. 

'சவுக்கின்' சாதி வெறியர்களுக்கு ராசாத்தியின் இருப்பியல் உறுத்தினால் அவர்கள் கருணாநிதியின் மேல் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி வைத்திருக்கிறார் என வழக்கு போடட்டும்! ஜெயித்துக் காட்டட்டும்! அதை விடுத்து நாற்பது வருடக் கதையை சொல்லப்போனால் அறுபது வருடக்கதையை தூசி தட்டுகிறார்கள்  என்றால் அவர்களின் எண்ணம் கருணாநிதியின் படிமத்தைக் கலைப்பதேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்?          
  ராசாத்தியின் சொத்துக்கள், கணக்கில் வரவில்லையா? அதனைப் பற்றிய petition ஒன்றை நேரடி வரித் துறைக்கு 'சவுக்கு' எழுதட்டுமே! 

(கோமளவல்லியின் மேல் தட்சிணாமூர்த்தி  சொத்துக்குவிப்பு வழக்கு போடும்போது, தர்மாம்பாள் மீது வழக்கு போட கோமளவல்லியை தடுத்தது எது? சொத்துக் குவிப்பினை  மிக எளிதாக நிறுவிவிடலாமே!)  

சவுக்கின் கோபத்தை என்னால் உணரமுடிகிறது! இத்தனை வருடங்களாக எழுதி வரும் சவுக்கு இணையதளத்தின் பெருமையை இன்று முளைத்த காளானான நான் தட்டிச் சென்றால் அவர்களுக்குப் பொறுக்குமா? இதையேதான் கருணாநிதியும் செய்தார். தமிழ்த்தலைவன்  எனத் தன்னை நிலை நாட்டியபிறகு நேற்று முளைத்த ஒரு சிறுவன் தன் பெருமையை  தட்டிச்செல்ல  முற்பட்டால் எந்த அரசியல்வாதிதான் பொறுத்துக்கொள்வான்? அதுமட்டுமல்ல! 

அமிர்தலிங்கம்

அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ய வேண்டாம் எனப் புலிகளைப் பொது மேடையிலேயே  கேட்டுக் கொண்டார் கருணாநிதி. ஆனால் நடந்தது என்ன! அன்று மாலையே அமிர்தலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது புலிகளின்  மேலான கருணாநிதியின் வன்மத்தை அதிகரித்தது. இயல்புதானே! 
இந்த மாதிரியான் அரசியல் வன்மங்களை,  அது மட்டுமல்ல, அரசியல் கொலைகளை புலிகள் புரிந்ததில்லையா? தனக்கு எதிராக, அல்லது தனக்கு முழு ஆதரவு கொடுக்காத புலித் தலைவர்கள் பலரையே பிரபாகரன் கொன்று மாயத்துள்ளார்! இதனையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது? இந்த வகையில் பார்த்தால் கருணாநிதி செய்தது எந்த வகையில் பிழை?
 கருணாநிதி செய்த மாபெரும் பிழை என்னவென்றால், பிரபாகரனோடு அந்த ஈழத் தமிழர்களெல்லாம் போய்ச் சேரட்டும் எனக் கண்டும் காணாத மௌனியாகிவிட்டதே! பிரபாகரன் மீது மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களின் மீதும் அதீதக் கோபத்தில் இருந்தார் கருணாநிதி! 
("அவர்களும் அந்த பொடியனைத் தானே ஆதரிக்கிறார்கள்! நான் எதற்கு அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்?"
 
புலிகளின் கோரிக்கையான  தனித்தமிழ் ஈழத்தை நானும் ஆதரிக்கிறேன்! சிங்களன் உரிமையை மறுத்தால் தமிழன் தன் உரிமையைத் தானே பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 
 உயிரை எடுத்தால், தமிழ்க்கறி கிடைக்கும் என போர்ட் மாட்டி, ஆட்டுக் கறி போல தமிழனின் கறியை விற்றால் ஆயுதம் தூக்கத்தான் வேண்டும். 
ஆனால் புலிகளின் வழியோ! அய்யகோ! கொடுமை!  எதிரியுடன் போராடுவதை விட்டுவிட்டு சகோதர இயக்கங்களின் தலைவர்களை முதலில் கொன்றொழித்தார்கள். வடக்கு கிழக்கு மாகாணத்தில்  புலிகள்  புரிந்த முஸ்லிம் விரட்டியடிப்புக்கு இன்னும் விளக்கங்கள் இல்லை.

புலிகள் முள்ளிவாய்க்காலில்   மாய்ந்து கொண்டிருக்கும்போது கனிமொழிக்கு போன் செய்தால் வந்த பதில் என்ன தெரியுமா? ' அப்பிடியா! அப்பா தூங்கிட்டிருக்காரு! எழுந்தவுடனே சொல்றேன்!' என்பதுதான்!  அதனை எந்த வகையில் நீங்கள் குற்றம் சாட்ட முடியும்?  சொன்ன பேச்சையெல்லாம் சொல்லும்போது கேட்காமல் இப்போது *** வலிக்கிறதென்றால்  யார் காப்பாற்றுவார்கள்?

'கொலை வாளினை எடடா மிகு 
கொடியோர் செயல் அறவே!' 

என பாரதிதாசன் பாடினார்! உண்மைதான்! ஆனாலும்  மாறுபட்டக் கருத்துடையோரும் கொடியோர் எனக் கருதுவது முறையா?! புலிகளின் தவறு ஆரம்பித்தது அங்கேதான்!  

புலிகளின் வாலாகிய சீமான் போன்ற தற்குறிகள் இங்கே கூவித் திரிகிறார்கள்! தமிழுணர்வைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து, பிறகு தேசிய நீரோட்டத்தில் கலந்து,  தமிழர்களுக்கு துரோகமிழைத்த அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களுக்கும் சீமான் போன்றவர்களுக்கும் ஒரு துளியளவும் வித்தியாசமில்லை. தமிழ்தேசியத்தை ஒலித்து ஒலித்து ஓய்ந்த சங்கின் உடைசல் சீமான்.  பிரபாகரனை கைது செய்வேன் என ஒருநாளும், நான் அவரின் சகோதரி என மறுநாளும், சந்திரிகாவுடன் விருந்து உண்ண இன்னொரு நாளும் காங்கிரசை கைகொடுத்துக் காப்பாற்ற மற்றுமொரு நாளுமாகத்   
திரியும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் அரசியல் அரைவேக்காடு! கழுத்து நரம்பு புடைக்க மேடையில்  கத்தினால் ஒரு மயிர் கூட உதிராது ஐயா!

வாசகி 'தாவும் மான்' அவர்களே!   சவுக்கு போன்ற சாதி வெறியினைப் பரப்புகின்ற இணையதளத்தைப் படிப்பது ஒரு Intellectual error! அதனை இனிமேல் படிக்காதீர்கள்!
நான் அசிங்கமாக எழுதுகிறேன் என தயவுசெய்து   நினைக்காதீர்கள்! 
நான் உண்மையை மட்டுமே எழுதுகிறேன்! உண்மையை மட்டுமே எழுத எப்போதும் விழைகிறேன்! 

Wednesday, March 2, 2011

தெய்வமாக்கப்படுவதால் அவமானப்படும் கலைகள்

சென்ற வாரக்கடைசியில்  தஞ்சாவூர் செல்ல நேர்ந்தது. இரு தின விஜயம். சென்ற வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதால், மிச்சமிருந்த கொஞ்ச நேரத்தை தஞ்சை பெரிய கோவிலில் செலவிட்டோம்.  கோவிலில் சரியான கூட்டம். ஆண்களும் பெண்களும் குழவிகளும் கிழவிகளுமாக! தஞ்சாவூரில் அழகுக்குப் பஞ்சமில்லை. 
ஞாயிற்றுக் கிழமை என்பதால் வரும் கூட்டம் போலிருக்கிறது என நான் கருதினேன்! அப்புறம்தான் தெரிந்தது- அதெல்லாம் சாமி கும்பிட வந்த கூட்டம் என்று! வாயடைத்துப் போய்விட்டேன்!  

அடே! உங்கள நூறு பெரியார் வந்தாலும் திருத்தமுடியாதுடா! 

தஞ்சை பெரிய கோவில் ஒரு கோவிலே அல்ல! அது ஒரு கோட்டை! வெளிப்புறம் உள்ள அகழி, வெளிநகரம், உள்நகரம் என அமைந்த ஒரு கோட்டை! அதை சற்று கூர்ந்து கவனித்தால் யாருக்கும் புரியக்கூடிய உண்மை இது! 

 தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம்  வருடம் நிறைந்துவிட்டது. அதன் சிற்ப வேலைப்பாடுகளைப் பாருங்கள். கல்லிலே, ஏதோ களிமண்ணைக் குழைத்து வடித்ததுபோல் என்னமாய் செதுக்கியிருக்கிறார்கள்!? சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் அதற்கு மேலான தொலைவிலிருந்தும்கூட கொண்டுவரப்பட்டக் கற்களைக் கொண்டு செதுக்கப்பட்ட சிலைகள்! ஏதோ உயிர்கொண்டு நடமாடுவதைப்போல் துலங்கும்  கற்சிலைகள்.    அதையெல்லாம் ரசிப்பதை விட்டுவிட்டு ஏதோ சிவலிங்கத்தை வழிபடும் இந்த ஆட்டுமந்தைகளை எதால் அடிக்கலாம்? நீங்களே ஒரு யோசனை சொல்லுங்கள்! 

மேலே இருக்கும் படம், அந்தக் கோட்டையின் உட்புறத்தே இருக்கும் ஒரு கோவிலில் உள்ள விக்கிரகத்தின் 'மாதிரி'! அதாவது கோவிலின் உள்ளே அதே போன்ற சிலை ஒன்று உண்டு! அதனை வழிபட்டது போதாதென்று கோவிலின் வெளியே வந்து, இந்த சிலையை தொட்டு தொட்டு வணங்கி அதை  நாறடித்துவிட்டார்கள்  இந்த பாவிகள்!  இந்த 'மாதிரி' சிலையை கண்டறிந்து, அதனை முதலில் வழிபட்டவன் எவ்வளவு அறிவுக் குருடனாக இருப்பான் என எண்ணும்போதே எனக்கு தலை சுற்றுகிறது!  

எனக்கு இராஜராஜன் மேல் விமர்சனங்கள் உண்டு! ஏற்கனவே அதனைப்பற்றி ஒரு சிறிய கவிதை கூட எழுதியிருக்கிறேன்! படிக்க சொடுக்கவும்.   தஞ்சையின் கோட்டையைக் கட்டிய தலைமை சிற்பி யார் என்ற தகவல் யாருக்கும் தெரியாது. மகேந்திரவர்மப் பல்லவன் கட்டிய மாமல்லபுரத்தின் குகைக் கோவில்களை எழுப்பியது ஆயனர் என்ற சிற்பிதான் என்ற தகவல் உள்ளது.  கல்கிகூட அதனை சிவகாமியின் சபதத்தில் எழுதியிருக்கிறார். (ஆயனரே சிவகாமியின் தந்தை என்ற கற்பனையோடு)  
தஞ்சைக்கு அந்த மாதிரியான நம்பத்தகுந்த தகவல்கள் இல்லை. எவ்வளவு பெரிய இருட்டடிப்பு? 

சிவனைப்பாடிய நால்வரின் சிலைகள் அங்கு இருக்கிறது! நந்தி மண்டபத்தின் மேற்கூரையில் மராட்டியர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இருக்கிறது! கல்லிலே மயில் தோகை விரித்தாடுவதைப் போல் அந்தக் கோபுரம் முழுவதும்  
 பல இடங்களில் இருக்கிறது. 

அதையெல்லாம் ரசிப்பதை விட்டுவிட்டு சிவலிங்கத்தை வழிபடப் போகிறீர்களே! மக்களே! 

நீங்கள் செய்வது - இருபது வருடங்களாக கற்களோடும் உளிகளோடும் வாழ்ந்து காயப்பட்ட ஆயிரம் சிற்பிகளின் சமாதிகளில் எச்சில் துப்புவதற்குச் சமானம்! 

தொடருங்கள் உங்கள் லிங்க-யோனி வழிபாட்டை! 


குறிப்பு: 
1 .எப்படி அங்கு ஹிந்தி POLLUTION ஏற்பட்டது. தேவநகரி எழுத்தில் சில கல்வெட்டுகளைப் பார்த்தேன்! மராட்டியர்கள் கொண்டுவந்திருக்கலாம். தெரிந்தவர்கள் விளக்கமளிக்கலாம்! 
2 .    மேலே கண்ட படங்கள் எல்லாம் என் 1 .3 MP கொண்ட செல்பேசியில் எடுத்தது. அவ்வளவு தெளிவாக இருக்காது.