Sunday, January 2, 2011

ஹிந்தி ஒரு தேசிய மொழியா?

ஒரு இலத்தீன் அமெரிக்க நாவலின் கதை. அந்த நாடு ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கித் தவித்தது. அந்த சர்வாதிகாரியின் அமைச்சரவையின் மொழிவளத்துறை அமைச்சரிடம்  சர்வாதிகாரி ஒரு கட்டளை இடுகிறான். நமது ஆட்சியை எதிர்த்து இந்த நாட்டு மக்கள் எதுவுமே பேசக்கூடாது. அதற்க்கேற்றவாறு இந்த மொழியை மாற்றி வடிவமைக்க வேண்டும் என்று. அந்த அமைச்சர், அந்த நாட்டு மொழியில் உள்ள எதிர்ப்பு வார்த்தைகளை எல்லாம் நீக்கியும் அவைகளைப்  பேசினால் சட்டவிரோதம் என்றும் ஆணையிடுகிறார். மக்கள் சர்வாதிகாரத்திற்கு பயந்து தங்கள் பேச்சை குறைத்துவிடுகின்றனர். கடைசியில் அந்த மொழியில் வெறும் பத்து வார்த்தைகள் மட்டுமே மிஞ்சுகின்றன. 

எங்கெங்கு போயினும் ஹிந்தி. இந்தியா என  இந்துக்கள் வாழ்வதால்  அவ்வாறு பெயரிடப்பட்டதா?  ஹிந்தி மொழி அதிகம் பேசப்படுவதால் அவ்வாறு பெயரிடப்பட்டதா? ஹிந்தி சமஸ்கிருதத்திலிருந்து வழி வந்த ஒரு மொழி. சமஸ்கிருதம் பல குட்டிகளைப்  போட்டுள்ளது. பெங்காலி, மராத்தி, குஜராத்தி, போஜ்பூரி, காஷ்மீரி போன்ற பல மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை. ஆனால் சமஸ்கிருதம் இன்று பேச்சு வழக்கில் இல்லை. தடந்தெரியாமல்   அழிந்து ஒழிந்துவிட்டது. இன்றும் கோவில்களில் தேவபாஷை என்ற பேரில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் அதுவும் தேய்த்து அழிக்கப்பட்டது. கோயில்களில் தமிழ் ஒலிக்கக்கூடாது எனவும் அது 'நீச பாஷை'  என ஒருவன் கூறினான். அவன் இப்போது கொலை வழக்குக்காக கோர்ட் படி ஏறுகிறான்.  


 தமிழ், வந்தேறிகள் வந்து புகுவதற்கு முன்னாலேயே இலக்கியம் படைத்திருந்தது. இன்னும் சீரிளமையோடு பேசப்பட்டு வருகிறது. 

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வரலாற்று ரீதியான பகைமை இருக்கிறது. சமஸ்கிருதம் பேசிய வந்தேறிகள் தமிழ் பேசிய குடியை கொன்றொழித்தார்கள். சாதி என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்தி தமிழினத்தை அடிமைப்படுத்தினார்கள். கடவுள் பயத்தை ஏற்படுத்தி வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தினார்கள். இதெல்லாம் வரலாறு. இந்தியா முழுமைக்கும் வாழ்ந்த  மூத்த குடியை தென்புறத்தே  தள்ளிவிட்டு வடக்கு பிராந்தியம்  முழுமையையும் ஆண்டார்கள். மன்னர்களை அடிமைப்படுத்தி, அவர்களை கடவுள் பயத்தில் தள்ளி, புறக்கடை ஆட்சி நடத்தினார்கள். மனு தர்மம் என்று ஒன்றை எழுதி, அந்த தர்மம் அவர்களுக்கு சாதகமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். வருணாசிரமம் எக்காலத்திலும் உடைந்து விடாமல் பார்த்துக்கொண்டனர். சமஸ்கிருதம் பேசிய ஒவ்வொரு நாவும் தமிழுக்கும் தமிழ்க்குடிக்கும் எதிராக விஷம் தெளிப்பதையே கருத்தாகக் கொண்டிருந்தது.  அந்த மொழி ஒரு குறிப்பிட்ட சாதியினருக்குமட்டுமே சொந்தம் எனப்பட்டது. மற்றோர் அதைப் பேச தடை விதிக்கப்பட்டது. (குப்தர்கள் காலம்). நான்காயிரம்  ஆண்டுகளாக  இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், எல்லோரும் சமம் என் சட்டத்தில் எழுதி விட்டு எல்லா அதிகாரத்தையும் அந்த மொழி பேசிய கும்பலே பிடித்துக்கொண்டது. முக்கியமான துறைகளில் அவாளை தலைமையாக நியமித்துவிட்டு மற்ற அலுவலர்களை நியமிக்க அவாளுக்கே அதிகாரம் வழங்கப்பட்டது. (உம்-AG 's Office , Banks ). 

ஆகவே சமஸ்கிருதத்தில்  பேசப்பட்ட, எழுதப்பட்ட, பகிர்ந்துகொள்ளப்பட்ட எல்லா விஷயங்களுமே தமிழ்க்குடிக்கு எதிரானது என்பதால் அந்த மொழியே ஒரு விஷமாகத்தான்  தமிழ்க்குடியால் பார்க்கப்படும்.  இது இயற்கைதான். அந்த மொழி மட்டுமல்லாமல் அது வழி தோன்றிய அனைத்து மொழிகளையுமே விஷக்களையின் வித்துக்களாகத்தான் பார்க்கமுடியும். 

அரசின் முயற்சி. 

இந்தியா அரசின் அரசியலமைப்புச்சட்டம், எல்லா  மக்களையும் கலந்து எழுதப்பட்டது போன்ற ஒரு பிரமையில் நீங்கள் எல்லாம் இருப்பது தவறு. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சென்ற, அரசியல் அமைப்பு சட்ட சபையில் அங்கம் வகித்த பிரதிநிதிகளில் பெரும்பாலானோர் அந்தந்த சமஸ்தான ராஜாக்களின் அல்லக்கைகள் தான். மக்கள் அனுப்பிவைத்த பிரதிநிதிகளுக்கு அரசியல் சட்டம் என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பில்லை.  இப்படிப்பட்டோர் எல்லாம் ஒன்று கூடி சட்டம் எழுதி விட்டு அதை படிக்கும் போது 'We the people of India ' என்று படித்தார்கள். 
இந்த அரசியலமைப்புச்சட்டம் ஹிந்திக்கே வக்காலத்து வாங்கும். அப்படித்தான் வாங்கியது. வாங்குகிறது. இந்த சட்டத்தின் ஷரத்து 29 -இன்படி  ஒவ்வொரு மொழியும், அரசால் அங்கீகரிக்கப்படும். சிறுபான்மையினர் மட்டுமல்லாது எந்த பகுதியினரும், இனத்தவரும்  தங்கள் மொழியை, கலாச்சாரத்தை  பாதுகாத்துக்கொள்ள உரிமை பெறுகின்றனர்.   

இப்படிப்பட்ட ஷரத்துகள் இருந்தாலும், மத்திய அரசு ஹிந்தியை தமிழகத்தில் கட்டாயமாக்க முயற்சித்தது. இராஜாஜி முதல்வராக இருக்கும்போது இது நடந்தது.  பெரும் போராட்டத்துக்குப்பின் அது வாபஸ் பெறப்பட்டது. எத்தனையோ உயிர்கள் மாண்டன. தாளமுத்து, நடராசன் போன்றோர் தீக்குளித்தது இப்போதுதான். மொழிப்போரில் தீக்குளித்தவர்கள் எல்லோரும் தமிழரின் வரலாறு அறிந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு சமஸ்கிருதத்தின், ஹிந்தியின், வருணாசிரமத்தின் நுண்ணிய அரசியல் புரிந்திருக்கும் என நான் எதிபார்க்கவில்லை. சாராய போதையில் கூட சிலர் தீக்குளித்து மாண்டிருப்பார்கள். இது என்ன எங்கும் நடக்காததா என்ன? இந்த ஹிந்தி எதிர்ப்பை  சாதகமாக்கி பதவிக்கு வந்தவர்தான் அண்ணாதுரை. 


 ராஜகோபாலாச்சாரியார் ஒரு பிராமணர். குலக்கல்வித்திட்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். அதாவது அந்தந்த குலத்தைச் சார்ந்தவன் அந்தந்த குலத் தொழிலே செய்ய வேண்டும். அதையே படிக்க வேண்டும். புரோகிதம் செய்தவன் புரோகிதம் செய்யவேண்டும். நாவிதன் முடிவெட்டவேண்டும். பறையன் பிணம் புதைக்கவேண்டும் . அருந்ததியர்  மாடறுக்க வேண்டும். என்ன ஒரு திமிர்? 

இந்த விஷம் தான் இன்னும் தொடர்கிறது. இந்த விஷ வித்து, விஷ மொழியை தமிழ்நாட்டுக்குள் புகுத்தப்பார்த்தது.அது நடக்கவில்லை. 

எனக்குத்தெரிந்த பல நண்பர்கள் புலம்புவது இதுதான். வெளிமாநிலங்களுக்குப்போனால் நம்மால் ஹிந்தி பேச முடிவதில்லை. எல்லா மாநில மக்களும் பேசுகிறார்கள். நம்மால் முடிவதில்லை என தற்குறித்தனமாக பேசுவார்கள். அவர்கள் அண்ணாத்துரையையும் கருணாநிதியையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவார்கள். அவர்களால்தான் தமிழ் மக்களால் ஹிந்தி பேச முடியவில்லை என்று.  


 கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற பிற திராவிட மொழிகளில் உள்ள சம்ஸ்கிருத அசுத்தத்தின் நாற்றமே என்னால் சகிக்கமுடியவில்லை. ஹிந்தியை எப்படி உள்ளே அனுமதிப்பது?  அவர்களுக்கெல்லாம் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். 

"அடங்கொக்காமக்கா! முதல்ல தமிழ்நாட்டு  வரலாற படிங்கடா.  
வருணாசிரம வரலாற படிங்கடா. ஒரு மொழி எப்படி விஷமா மாறும்னு தெரிஞ்சிக்கங்கடா. தமிழ்  மொழியோட அருமை பெருமைகளை முதல்ல தெரிஞ்சிக்கிங்கடா! அதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா வேணும்னா ஹிந்தி படிச்சிக்கிங்கடா. வேணும்னா அதுக்கு முன்னாடி கருணாநிதியையும் அண்ணாதுரையையும் கெட்ட வார்த்தையில திட்டிட்டுப் போங்கடா"  
என்பதுதான்.
இப்போது தமிழ்மொழி அழியும் நிலையில் இருந்து மெல்ல மீள ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.        










No comments:

Post a Comment