Thursday, January 6, 2011

தெலுங்கானா

 தெலுங்கானா கோரிக்கையின் வயது ஐம்பதுக்கும் மேலே. தெலுங்கானா  பகுதி புவியியல் ரீதியாக சரியாக அமையவில்லை. அது மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றால் கிடைக்கும் மழை அதற்கு கிடைப்பதில்லை. வடகிழக்கு பருவக்காற்றால் கடற்கரையோரம் மட்டுமே மழை பெறுகிறது.

மொழிவாரி மாநில சட்டம் இயற்றப்பட்டு மாநிலங்கள் பிரித்ததிலிருந்து தெலுங்கானா கோரிக்கை உள்ளது. தெலுங்கானா மக்கள் மற்ற ஆந்திர மக்களைக்காட்டிலும் வட்டார வழக்கு மொழியிலும் மக்கள் தொகையிலும் சற்று வேறுபட்டவர்கள். கோண்டு, குவி போன்ற பழங்குடி மக்கள் அங்கு நிறைந்து வாழ்கிறார்கள்.

தெலுங்கானா மக்கள் தாம் அரசால் ஒதுக்கப்பட்டதாகவே உணர்கிறார்கள். அரசின் நலத்திட்டங்களால் தெற்கு ஆந்திர மக்கள் அதிக பலன் அடைவதாகவும் தமக்கு சேரும் நலத்திட்டங்கள் சேராமல் போவதாகவும் அரசை குறை கூறுகிறார்கள். அவர்கள் அனுப்பும் MLA -க்கள் வெறும் சட்டசபையைத்தான் நிறைக்கிறார்கள். அதிகாரமும் அங்கீகாரமும் அவர்கள் பகுதி மக்களுக்கு கிடைக்காமலேயே போய்விடுவதாக அம்மக்கள் கருதுகிறார்கள்.

இதனால் அம்மக்கள் தமக்கென அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் எனக் கோருவதி இயற்கை  அல்லவா? .

மதராஸ் மாநிலத்திலிருந்து ஆந்திரத்தை பிரித்ததே ஒரு பெரும் கதை. பொட்டி ஸ்ரீராமுலு தனி மாநில கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தே உயிர் நீத்தார்.

சென்ற வருடம் ராஷ்ட்ரிய தெலுங்கானா சமிதி-யை சேர்ந்த திரு. சந்திரசேகர் ராவ் தெலுங்கானா கோரிக்கைக்காக காலவரையற்ற உண்ணாவிரதமிருந்தார். பெரும் கலவரங்களுக்கு பிறகு அரசு நீதியரசர் பி என் ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் தெலுங்கானா ஆணையத்தை அமைத்தது. தெலுங்கானா மாநிலம் அமையக்கூடாது என எதிர் புரட்சிகளும் ஆரம்பித்தன.

கலந்த 31 டிசம்பர் 2010 -இல் தெலுங்கானா ஆணையம் தமது அறிக்கையை அரசுக்கு அளித்தது. கூடிய விரைவில் அவ்வறிக்கை மக்களுக்கு வெளியிடப்படும். ராணுவமும் துணை ராணுவமும் கலவரத்தை எதிர்பார்த்து ஆந்திரத்தில் குவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 3 -இன் படி, மாநிலங்களின் எல்லைகளை, பெயர்களை மாற்றவும் மாநிலங்களை பிரிக்கவும் சேர்க்கவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. சாதாரண majority -இல் இந்த எளிமையான காரியத்தை செய்துவிட முடியும். ஆனால் இவ்வாறான கோரிக்கைகளை தொடர்ந்து கண்டுகொண்டால் தனி மாநில கோரிக்கைகள் கணக்கின்றி பெருகும்.

ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட தனிமாநில கோரிக்கைகள் உள்ளது. தனி மாநிலங்கள் அமைப்பத்ல் தவறொன்றும் இல்லை. ஏனெனில், சிறு சிறு பகுதிகளில் நிர்வாகத்தை சிறப்புற நடத்த இயலும். 25 -கோடி மக்கள் கொண்ட அமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் உள்ளன . ஆனால் நூறு கோடி மக்கள் உள்ள இந்தியாவில் வெறும் 28 மாநிலங்களே உள்ளன.

தனிமாநில கோரிக்கைகளை கூர்ந்து கவனிப்பது  அவசியமாகிறது. அதிகார வெறியும் பதவி  ஆசையும் கொண்ட அரசியல்வாதிகளின் கைகளுக்கு  எந்த ஒரு மாநிலமும் சென்றுவிடக்கூடாது.

என்னைப்பொறுத்தவரையில் தேச எல்லைகளே தேவை இல்லை என்றுதான்  கூறுவேன். உலகைத்துண்டாடுவதிலேயே எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நிர்வாக நன்மைக்காக மாநிலங்களைப் பிரிப்பதில் தவறொன்றுமில்லை.

No comments:

Post a Comment