Tuesday, January 4, 2011

தீ! தீ! தீ!




சிறு சிறு பொறிகள் சென்றடைந்த செவிகள் 
செவிகள் கடந்து செப்பிய வாய்கள்
வடிவம் பெருத்து வல்லினம் கோர்த்து 
பெரிதாய்ப் போன சிறு சிறு பொறிகள். 


சில கற்பனைகள் சேர்த்த பொறிகள் 
கோர்த்த பெரும் அரூப நெருப்பு 
சினங்கள் கலந்து பயங்கள் கலந்து 
கொழுந்து விட்டெரியும் கோர நெருப்பு 


சேரும் இடம் சேர்ந்த பின்னர் 
சில மடங்காகும் சிவப்புத் தீ 
பொங்கும் ஆழி வீறிடும் புயல் 
கொட்ட இடம் தேடும்  கருங்கொண்டல்  


கொட்டிய இடம் வெற்றுப் பாலை 
வெள்ளம் இல்லை அக்கினிச் சாரல்
 செல்லும் வழியை தீய்த்து வைக்கும் 
குழம்பு ஆறு குருதிப்பெருக்கு


இரட்டிப்பான தகிக்கும் காந்தல்
கருகும் சிறகுகள் பொசுங்கும் வாடை 
வழியெங்கும் பிணங்கள் மலரும் சாலை  
வதந்தி வதந்தி வதந்தி வதந்தி 

No comments:

Post a Comment