எழுபத்தைந்து வயதான மேலந்தபெட்டு கிராமத்தில் வசிக்கும் பைலு என்பவர் இதுவரை போஸ்ட் ஆபீஸ்-ல் கால் வைத்ததில்லை. அங்கு போஸ்ட் ஆபீஸ் இல்லை என்ற காரணத்தால் இல்லை. அவ்வாறு கால் வைத்தால் அங்கிருந்து தூக்கி வெளியே எறியப்படுவோம் என்ற பயம்தான் காரணம். ஏன் என்றால் அவர் ஒரு தலித்.
கர்நாடகத்தில் உள்ள தெற்கு கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுக்கா, மேலந்தபெட்டு கிராமத்தில்தான் இந்த கொடுமை. வயது முதிர்ந்த தலித்துகள் தங்கள் பென்ஷன் பணம் பெறுவதற்காக போஸ்ட் ஆபீஸ்-இன் வாசலில் காத்திருக்கவேண்டும்-கொளுத்தும் வெய்யிலில். அந்த அலுவலர்கள் வெளியே வந்து கையிலுள்ள பணத்தை வேறு யாரிடமாவது கொடுப்பார்கள். அவர்கள் அந்த தலித் மக்களுக்கு கொடுப்பார்கள். No Direct Dealing.
அந்த போஸ்ட் ஆபீஸ் ஊருக்கு நடுவில்கூட இல்லை. போஸ்ட் மாஸ்டர்-இன் வீட்டுக்கருகில் உள்ளது. தீண்டாமையை ஜீரணித்துக்கொள்ளும் வயதானவர்களின் நிலைமை ஒருபக்கம். அதனை சீற்றத்துடன் உற்று நோக்கும் இளைய தலைமுறை மறுபக்கம்.
(நன்றி- தி ஹிந்து நாளிதழ் 28 -01 -2011 )
மத்திய அரசு உண்மையாகவே சமத்துவத்தை உருவாக்க முனைகிறது என்றால் செய்யவேண்டிய காரியங்கள் இவைதான்.
- இந்த சம்பவத்தை ஆராய்ந்து அதன் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.
- அது உண்மை என நிறுவப்பட்டால் அந்த அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படவேண்டும்.
- அதோடு அவர்கள் மேல் Protection of Civil Rights Act படி தகுந்த தண்டனை வழங்கப்படவேண்டும்.
இவைதான் மத்திய அரசின் மாண்பை காப்பாற்றும்.
No comments:
Post a Comment