Wednesday, January 12, 2011

அஹிம்சை என்பது என்ன?

சொல்லுங்கள் நண்பர்களே! அஹிம்சை என்றால் என்ன? ஜீவகாருண்யம்? உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்? எதிரிகளிடம் அன்பு செய்தல்? இவைதானே?

நண்பர்களே! காந்தி பிறந்த மண்ணில் பிறந்த நீங்களும் அதை ஒப்புக்கொள்வீர்கள். அதை அங்கீகரிப்பீர்கள். நான் அதை மறுக்க முனைகிறேன். எனக்கும் எதிரிகளிடத்தில் அன்பு செலுத்த பிடிக்கும். எனக்கும் அஹிம்சை பிடிக்கும். ஆனாலும் என் கருத்தை கொஞ்சம் கேளுங்கள்.

ஒரு மனிதன் தனக்கு துன்பம் இழைக்கும் ஒருவரை, தன் எதிரியை மன்னிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் எதிரியின் வலிமையை தடுக்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றால் அதன் விளைவு என்ன? அந்த எதிரி அவனை தேய்த்து அழித்து விடுவான் அல்லவா? இதுதான் அஹிம்சையின் விளைவு.

ஆக உண்மையான அஹிம்சை என்பது அழிவதற்கான வழிகளில் ஒன்றே! ஏதோ ஒன்று, அது மனிதனோ விலங்கோ, உங்களை கொல்லும் நோக்கத்தோடு தாக்க வரும்போது உங்களின் செயல் என்னவாக இருக்கும்? தற்காத்தே ஆகவேண்டும். இல்லையேல் உயிர் போய் விடும்.


தென் அமெரிக்க பழங்குடியினரை கொன்று  குவித்தார்களே ஸ்பானியர்களும் போர்த்துகீசியர்களும். அப்போது அவர்கள் அஹிம்சை முறையை கையாண்டிருந்தால் அவர்களின் உயிர் இன்னும் எளிதாக போயிருக்கும். வெள்ளை வெறியர்கள் மிக எளிதாக வென்றிருப்பார்கள்.

எதிரி ஒரு வாய்ப்பு கொடுத்தாலன்றி, அஹிம்சையை பிரயோகிக்க அங்கு வாய்ப்பு இருப்பதில்லை. பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆகிய ஐரோப்பிய நாட்டினர் வன்முறையை மட்டுமே பயன்படுத்தி உலகை வென்றனர். நமது இந்தியாவிலேயே ராஜராஜ சோழன், அசோகன், அவ்ரங்கசீப், அக்பர், போன்ற நாம் இன்னும் போற்றக்கூடிய மன்னர்கள் அஹிம்சையை பயன்படுத்தி நாடு பிடிக்கவில்லை. காந்தியின் நாயகனான இராமனே வன்முறையை பயன்படுத்தித்தான் தன் மனைவியை மீட்க முடிந்தது.

அஹிம்சை என்பது மனித இயற்கைக்கு முரணானது. ஆனால் காந்தியின் அஹிம்சை வெற்றி பெற்றது என்ற அதீதப்படுத்தப்பட்ட கற்பனை தவறானது. ஒரு சாதாரண company ஒரு பெரிய நாட்டை 150  ௦ ஆண்டுகள் ஆண்டது. ஒரு சத்யம் நிறுவனமோ ஒரு இன்போசிஸ் நிறுவனமோ ஒரு நாட்டை பிடித்து ஆளுகிறது என்றால் நாம் நம்புவோமா?


அப்படிப்பட்ட நம்பவே முடியாத ஒன்று தான் இந்தியாவில் நடந்தது. அதற்கு மேலும் ஒரு நூறு வருடங்களுக்கு பிரிட்டிஷ் அரசு ஆண்டது. கங்கை முழுவதும் உறிஞ்சப்பட்டு தேம்ஸில் பிழியப்பட்டது. இந்த 250 ௦ ஆண்டுகளுக்குள் வந்த 20 -க்கும் மேற்பட்ட பஞ்சத்தில் 20  ௦ கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். எல்லாம் உறிஞ்சிய பிறகு மிச்சம் இருக்கும் எலும்புக்கூடுகளை  காப்பாற்ற வந்ததுதான் இந்த அஹிம்சை.

இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல. போனால் போகட்டும் என போடப்பட்ட பிச்சை. இவர்கள் சாதித்த எல்லா வெற்றிகளும்  வேறு கரங்களால் இவர்களுக்கு கிடைத்தவையே. உதாரணமாக
cripps Mission (1942 ), Cabinet Mission (1946 ) போன்றவை நேச நாடுகளின் தொடர் தொல்லையால் இந்தியாவுக்கு  கிடைத்தவையே. இவற்றை தங்களின் வெற்றியாக காங்கிரஸ் கொண்டாடியது. இன்னும் இந்த கலாச்சாரம் தொடர்கிறது.

காந்தி தன் முயற்சி எல்லாவற்றிலும் அஹிம்சையை கையாண்டார். நம் நாட்டு மக்கள் எல்லோரையும் வன்முறையை கைவிட முயற்சி செய்தார். உண்மையில் காந்தி கடைபிடித்தது அஹிம்சைதானா? இப்படி அவர் உண்மையாகவே செய்திருந்தால் வெள்ளையருக்கு என்னதான் பிரச்சினை? ஒரே ஒரு தடியடி. ஒரு துப்பாக்கி குண்டு. காந்தியின் உயிர் போயிருக்கும். ஏன் அதை செய்யவில்லை?  காரணம் உண்டு. காந்தி உண்ணாவிரதம் இருந்தால் அதைக்கண்டு, அவரைத் தொடர ஆட்கள் இருந்தனர். அவர்க்குப் பரிதாபப்பட ஆட்கள் இருந்தனர். அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் தன் உயிரையும் கொடுக்க ஆட்கள் இருந்தனர். அவர்மேல் லத்தி பட்டால் ஆயிரம் கைகள் உயரத் தயாராயிருந்தது. 

காந்தி காலத்திலும், பதில் வன்முறை உத்திரவாதமாக இருந்தது. ஆனால் அது அஹிம்சை என்ற பெயரில் இருந்தது.  அஹிம்சை என்பது indirect -ஆன வன்முறையே ஆகும். ஒகே. காந்தி ஒரு பிரச்சினையில் வெள்ளையர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்று கொள்வோம். அவரது  கொள்கையை அப்படியே பின்பற்றுபவர்கள் அஹிம்சையை கடைப்பிடித்து, போராட்டத்தில் ஈடுபடுவார்கள். துப்பாக்கி குண்டிற்கு நெஞ்சை காண்பிப்பார்கள்.  அவர்களின் மேலும் துப்பாக்கி குண்டுகள் பாயும்.அவர்கள் செத்துப்போவார்கள். அஹிமசைமுறையால். உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும். கண்டிக்கட்டும். அதனால் என்ன ஆகப்போகிறது? போல்பாட் இருக்கவில்லையா? ஹிட்லர் வாழவில்லையா? உலக நாடுகளின் opinion என்ன பெரிதாக செய்துவிடும்? வட கொரியா-வை என்ன செய்துவிட்டது? ஈரானை என்னசெய்துவிட்டது? ஆக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றால் சாவு உறுதி அல்லவா?
 
வரி கொடுக்காமல் மறுப்பார்கள். கல்லூரிக்கு போக மாட்டார்கள். வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் துப்பாக்கி குண்டுக்கும் பயப்படமாட்டார்கள். எவனுக்கும் குடும்பம் குட்டி இல்லையா என்ன?

சொந்த நாட்டையே அடிமைப்படுத்தி சர்வாதிகாரம் செய்யும் அதிபர்கள் இந்த உலகத்தில் உண்டு. ஏன் நாம் இந்திரா காந்தியின் ஆட்சியை பார்க்கவில்லையா என்ன ?

அவன் பிரிட்டிஷ் தானே? அவனை எது தடுத்தது? அஹிம்சை அல்ல. அவனது வெற்றி வேட்கை. பிரிட்டிஷ் இரண்டாம் உலகப்போரில் வெல்ல இந்தியர்களும் களத்தில் குதித்தாகவேண்டும். ஆகவே இந்தியர்களுக்கு அதிக உரிமை அளித்தார்கள் அவர்கள்.

காந்தி ஒரு இடத்தில் சொல்கிறார். எந்த நாட்டுக்கும் இராணுவம் தேவையில்லை என்று. அப்படியே இருந்தாலும் அவர்கள் போர்களின் போது, எல்லைப்புறம் நின்று தங்கள் மார்பை திறந்து காட்டவேண்டுமாம்.  சாவை புன்னகையுடன் வரவேற்க வேண்டுமாம். இது மாதிரி கிறுக்குத்தனமான ஒன்றுதான்  அவரது அஹிம்சை கொள்கையும்.  


என்னுடைய இந்த விமர்சனத்திற்கு கண்டனம் எழுப்புபுவர்களை  குறித்து நான் கவலை ஏதும் கொள்ளவில்லை. தூங்குவது போல நடிப்பவர்களை நாம் என்னதான் செய்துவிடமுடியும்?

நீங்கள் எல்லா அரசியல் அறிவியல் புத்தகங்களிலும் காந்தி, அவரது சர்வோதயா, அஹிம்சை மற்றும் சத்யாகிரஹா, ஆகியவற்றைப்பற்றி பார்க்கலாம். பல உலகளாவிய அரசியல் மேதைகள் அவற்றைப் பற்றி எழுதியிருப்பார்கள். ஆனால் அதை அவர்கள் எழுதும்போது புன்னகையுடன்தான் எழுதினார்கள் என்பது, அவற்றை நன்கு கூர்ந்து படித்தால் உங்களுக்கே  புரியும்.


இந்தக் கட்டுரையின் வாயிலாக நான் சொல்ல வருவது மூன்று.
1 .அஹிம்சையால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அஹிம்சை எதிர்பார்ப்பது எதிரியின் மனசாட்சியை/ கருணையை. மனசாட்சி இல்லாதவர்களிடம் அது எடுபடாது. 
2 .காந்தியின் அஹிம்சை முறை அஹிம்சை முறையே அல்ல.
3 .இந்தியர்கள் பெற்ற விடுதலை அஹிம்சைக்கு கிடைத்த வெற்றியல்ல. 
    
மற்றபடி ஒரு தனிப்பட்ட மனிதனாக நான் காந்தியின் பெரும் ரசிகன்.அவரது கொள்கைகளை  விமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது. வேறொன்றுமல்ல!!!

3 comments:

  1. º¡¢Â¡É ÅÕò¾õ ¯í¸û Á¼Ä¢ø ,«†¢õ¨º ¦¸¡û¨¸ÂÇÅ¢ø ¿¨¼Ó¨ÃÀÎòО¢ø §ÂüÚ¦¸¡ûž¢ø ¯í¸ÙìÌ ÁðÎõ «øÄ ±í¸ÙìÌõ ÓÊÂÅ¢ø¨Ä.¬½¡ø ¦¿Ãó¾ÃÁ¡É ¦ÅüÈ¢ «¨Á¾¢ ºÁ¡¾¡Éõ ¦ÀçÅñÎõ «Ð ¸¡ó¾¢ƒ¢ ¨¸¦¸¡ñ¼ «†¢õº À¾ƒÄ¢ÓÉ¢Å÷ ÂÁõ «¾Éø ÁðΧÁ ÓÊÔõ.--ÁýÉý

    ReplyDelete
  2. //மற்றபடி ஒரு தனிப்பட்ட மனிதனாக நான் காந்தியின் பெரும் ரசிகன்.//அப்படி என்றால் அகிம்சை இல்லாத காந்தியை நீங்கள் நேசிக்கிண்றீர்களா. அகிம்சையின்ரி அவர் ஒரு வக்கீல்,ஒரு உணவு ஆராய்ச்சியாளர்,ஒரு மூத்திர சோதனையாளர்,ஒரு காமக்களியாடு.இதில் எதன ரசிகன்.பசுத்தோலை எடுத்தபின் புளியல்லவோ இருக்கிறது.

    ReplyDelete
  3. ஆம்! அவர் ஒரு வக்கீல்தான். உணவு ஆராய்ச்சியாளர்தான், மூத்திர சோதனையாளர்தான், ஆனால் காமக்களியாடு அல்ல. தனது சத்தியசோதனை நூலில்கூட தந்தையின் மரணப்படுக்கையின்போது தான் தன் மனைவியுடன் சல்லாபித்தததை குற்ற உணர்வோடு கூறுகிறார். தென் ஆப்பிரிக்காவில் இருந்த டால்ஸ்டாய் பார்மில் (ஆசிரமத்தில்) ஒரு ஜோடிகள் தவறாக நடந்ததற்காக அவர் அந்த ஆசிரமத்தையே கலைத்திருக்கிறார். கடைசி காலத்தில், பாலுணர்வை பரிசோதிக்கிறேன் எனக் கேணத்தனமாக சில முயற்சிகளை செய்து சக தலைவர்களிடம் பேரைக் கெடுத்துக்கொண்டார். அறுபது வயதில் பேய்க்குணம்.

    அந்த பசுத் தோலுக்குப் பின் இருப்பது சாதுவானப் பூனைக்குட்டிதான் நண்பரே. ரொம்பவும் உற்றுப் பார்த்தால் அது புலி போலத்தான் தெரியும்.

    ReplyDelete