Friday, January 28, 2011

நீ என்கிற நீயும்-நான் என்கிற நானும்


குழாச்சட்டை எறங்குச்சுன்னா 
தெரியுற ஜாக்கி பட்டை உன்து
கொட்டாப்பட்டி எறங்குச்சுன்னா 
தெரியுற சுடர்மணி பட்டை என்து

சாதி இல்ல சாதி இல்லன்னு 
சலம்பல் பண்ற நீயி- ஒர்த்தன் வாயில 
சாணி கரச்சி ஊத்திட்டானுங்க 
நல்லாக்கேளு நீயி

வெயிலடிச்சா தாங்க மாட்ட 
வெள்ளத் தோலு உன்து-வெய்யில்ல 
ரோட்டுவேல செஞ்சி செஞ்சி 
கருத்த  தோலு என்து 

ஆறு மாசம் காக்க வச்சி 
அறுவடைக்கு ஏமாத்துது பூமி- நீ
கம்ப்யூட்டர்-ல காச நெதம்
அச்சடிக்கிற சாமி 

ஒன் சாயங்கால செலவுலதான்ப்பா 
எம்புள்ள கல்யாணமே ஆச்சு
ஒன் ஒரு வேள செலவுலதான்-எங்கப்பன்
காரியம் கூட ஆச்சு  

எம்புள்ளய உம்புள்ளகூட 
நானும் படிக்க வப்பேன்
கருப்பா, ஒரு ஓரத்துல நின்னு 
எம்புள்ளயும் படிச்சிக்கட்டும் 

எவ்வளவு தூரம் நீ சென்றுவிட்டாலும் 
எட்டிப்பிடிக்க நானும் வருவேன்-அதுவரை 
நான் ஏங்கிக் கொண்டிருப்பேன்  
ஏங்குவது எனக்கென்ன புதிதா  என்ன 

ஆனால் ஒன்று

எனக்கு மறுக்கப்பட்ட கருணைகளை 
என்றும் என்னிடம்  எதிர்பார்த்துவிடாதே
ஏக்கம் பின் எதிர்நிலையில் செயல்படும்
அதைத் தாங்கவொண்ணாது உன்னால்
 






 

No comments:

Post a Comment