தமிழ் தெய்வீகமானதா?
தமிழ்க்காவலர்களே,
மொழி ஓசைகளின் வடிவம் தானே?
கருத்துகளை பரிமாறத்தேவையான வாகனம் தானே?
அதற்கு கற்பு, புனிதம் எல்லாம் கற்பித்து-அதன்
வளர்ச்சியை தடுக்க வேண்டாம்.
உலக பல்கலைகழகங்களில் அறிமுகப்படுத்துங்கள்
சீரிய இலக்கியங்களை இயற்றுங்கள்.
பழமையைக்கருதி புதுமையை விரட்டாதிர்கள்
மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
தமிழின் மாண்பு தானே புரியும்
பெண்ணாக உருமாற்றி தமிழை
அடிமை கொள்ளாதீர்கள்
தமிழினி மெல்ல பிழைத்துக்கொள்ளும்
No comments:
Post a Comment