மானுடவியலின் கூற்றுப்படி மனிதனின் நிறம் என்பது அந்த மனிதனின் முன்னோரின் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மானுடவியல் மனித இனத்தை பலவாகப்பிரிக்கிறது. அவை யாவன, Negroid ,Negrito , Negrillo ,mediterraneans , Paleo -mediterraneans , australoids , Nordics , Caucasoids , Mongoloids என பலவகை உண்டு. ஒவ்வொன்றுக்கும் வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், முடியின் அமைப்பு, உயரம், மூக்கின் அகலம் (அ) கூர்மை, உடலின் நிறம் முதலியன. இந்த ஒவ்வொரு இனத்திலும் பல பிரிவுகள் உண்டு. இந்தியாவில் அனைத்துப்பிரிவுகளையும் நாம் காணமுடியும்.
இது ஒரு புறம்.
மானுடவியலாளர்களின் இன்னொரு கருத்து என்னவென்றால் சாதிகள் எல்லாம் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தே உருவானது என்பதே. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரின் பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமை பெறவில்லை என இந்தக் கருத்தை வைத்து உறுதியாகக் கூற முடியாதுதான். ஆனால் கருமை என்பது இழிவு, சப்பை மூக்கு என்பது அசிங்கம் என்ற கருத்துகள் மிக முன்னேறிய நாட்டில் கூட வழங்கப்பட்டு வருபவை. கருப்பர்கள் சப்பை மூக்கு அமைந்தோர், இன்னும் உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டே வருகிறார்கள். இதை யார் வேண்டுமானால் மறுக்கலாம். ஆனால் அவர்கள் தம்மைத்தாமே கண்ணாடி முன் வினவிக்கொள்ளவேண்டும். Racism is a global phenomenon. காந்தி கூட இனவெறியால் பாதிக்கப்பட்டவர்தான். நீங்கள் கேட்கலாம். ஒபாமா, கறுப்பராயிருந்தாலும் அமெரிக்க அதிபராக வெற்றி பெறவில்லையா என்று..
Karishma என்று ஒன்று உண்டு. அது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அந்த கரிஷ்மா என்பது கருப்பான நிறத்தினருக்கு அமைவது வெகு அரிது. ரஜினிகாந்த், ஒபாமா ஆகியோர் அதற்க்கு உதாரணம். ஆனால் உடல் நிறமே, குறிப்பாக வெள்ளை நிறம் மக்களைக் கவர்வதற்கு முக்கியமான ஒன்று என்பது பல நேரங்களில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நிறக்கவர்ச்சி, உலக மக்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஆசிய மக்களுக்கு உண்டு.
இந்தியருக்கு இது அதிகம் உண்டு. அதிலும் ஏழைகளுக்கு. அம்மக்களுக்கு அவர்கள் தெய்வம் போல காட்சி தருவார்கள். நினைவு கொள்க-வடிவேல் காமெடி- "வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்டா...". அவர்களின் குறைந்தபட்ச தியாகம் கூட ஏழைகளுக்கு மிக உயர்ந்ததாகப்படும்.
மக்களே! ஒன்று சிந்தியுங்கள். இந்திராகாந்தியை விட உங்களால் பாபு ஜகஜீவன் ராமை பிரதமராக யோசிக்கமுடிகிறதா? ராஜீவ் காந்தியின் இடத்திற்கு உங்களால் மூப்பனாரை யோசிக்க முடிகிறதா? இந்திராகாந்தியைவிட, ராஜீவ் காந்தியை விட ஜகஜீவன் ராமும் மூப்பனாரும் அதிகத் தகுதி பெற்றிருந்தாலும் கூட...
முடியவில்லை தானே? ஏன்?
இன உணர்வு என்பது அழியப்போவதில்லை. சாதி என்ற அழுகிய கட்டமைப்பு இந்தியாவில் இருக்கலாம். ஆனால் இனம் என்ற உணர்வு உலகம் முழுவதிலும் இருக்கிறது. அது உருவத்தில், உடலமைப்பில் இல்லை. அதை நோக்கும் மனதில் உள்ளது. அது அழகு எது என்ற கருத்துரையில் பதிந்துள்ளது. அழகு என்பது என்ன எபதை தற்கால அழகியல் பதிவு செய்ய மறக்கவில்லை என்றாலும், அதை மக்கள் மனதில் விதைக்க மறந்ததே அழகியலின் பெரிய குறை. அது விதைக்கப்படும் வரை, இன உணர்வு இருக்கத்தான் செய்யும். American History -X என்ற படத்தைப் பாருங்கள். இனம், இன உணர்வு பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் உங்களுக்குப் புரியும்.
No comments:
Post a Comment