Monday, December 27, 2010

கவிதைகள், கண்ணதாசன்





இதுவரை திரையுலகம் கண்ட , திரையுலகத்திற்கு மேலாக கவியுலகமும் கண்ட கவிகள் எல்லோரையும் விட கண்ணதாசனே சிறந்தவர் என்ற கருத்து நிலவி வருகிறது. இதைப்போல ஒரு அசிங்கமான கருத்து வேறில்லை.
இந்த கருத்துக்கான காரணத்தை நாம் அலச வேண்டும். 1950 லிருந்து 1975 வரையிலான காலகட்டம் தமிழகம்  திராவிடக்கட்சியினரின் பிடியில் இருந்தது. அவர்களின் மேடைப்பேச்சுக்களை கேட்டால் உங்களுக்குப்புரியும்.
அடுக்குமொழி பேசுவதாகக்கருதிக்கொண்டு அவர்களின் முட்டாள்தனமான உளறல்கள்- ஐயோ அம்மா- இது அண்ணா காலத்திலிருந்தே தொடர்கிறது. தமிழ் தமிழ் என்று தமிழனுக்கு இன உணர்வு ஊட்டி, கூடவே ரசிப்புத்திறனையும் மழுங்கடித்த பெருமை திராவிக்கட்சியினருக்கு உண்டு. T ராஜேந்தர் எல்லாம் இந்த வகையறா தான்.

அத்திக்காய் காய் காய் போன்ற பாடல்கள் நல்ல தமிழை தமிழனுக்குக்கொடுத்ததை நாம் மறுக்கவில்லை.ஆனால் தகுதிக்கு மீறிய அங்கீகாரம் ஒருவருக்கு  கிடைப்பதைத்தான் பொறுக்கமுடியவில்லை.
இன்று திரையுலகில் இருக்கும் யுகபாரதி, தாமரை, கபிலன், அறிவுமதி போன்ற தமிழ்க்கருவூலங்களைப்போல கண்ணதாசன் எழுதியிருக்கிறாரா? வேண்டுமானால் கண்ணதாசனை இயக்குனர் பேரரசு-வுடன் ஒப்பிடலாம்.   
இன்னோர் பாரதியாக  பாடல்கள் எழுதும் யுகபாரதி, இதுவரை தமிழ் இசை ரசிகன் கேட்டறியாத, ஏடுகளில் மட்டும் புழங்கப்பட்டு வந்த புதிய சொற்களை கையாளும் தாமரை, விளிம்பு நிலை மனிதருக்கும் புரியுமாறு புரியாத பல சித்தாந்தங்களை எளிமையாகக்கூறும் கபிலன், தமிழில் பிறமொழியை கலந்து அதை மாசுபடுத்த மறுக்கும் அறிவுமதி- இவர்கள் தான் மக்கள் தமிழை காக்க வந்த தமிழ்தூதுவர்கள். போற்றவேண்டுமானால் இவர்களை  போற்றுங்கள்.  





No comments:

Post a Comment