Tuesday, December 21, 2010

நடனமாதுக்கள்



சுழன்று நடனமாடும் அவள் விழியோரம்
சிறு துளி கண்ணீரை ஏன் நான் மட்டும் கண்டேன்?
பத்து ருபாய் தாட்கள் எறியப்படும் திசையில்
சிரித்த வண்ணம் சிறிது நேரம்
கண்ணுக்கு கண் நேராக நோக்குகிறாள்

மதுக்கூடம், வெறி ஏறிய விழிகள்
ஆடி முடித்த  அவளிடம் நான்
ஏதொரு கூச்சத்தையும் காணவில்லை
அகநானூற்று பரத்தையும் இப்படித்தான் இருந்தாளோ?

அவள்  ஒருத்தி மட்டும்
காலணி ஏதும்  அணிந்திருக்கவில்லை.

No comments:

Post a Comment