Tuesday, December 28, 2010

எப்படி முடிந்தது உன்னால்



கடைசி இரவின் கடைசி முத்தம்  
கண்ணீர்கள் கையசைப்புகள்
மின்னல்களாக தோன்றிச்செல்லும் 
நினைவில் மட்டும் அல்லாது பிறவிலும்


நேர்க்கோடாய்ச்செல்லும் காலுள்ள 
சர்ப்பம் ஒன்றைக் கண்டேன் 
மகிழ மரத்தடி சென்று மீண்டு வந்தது
வெளிவந்த பிக்கு ஒன்று  சொன்னான்
சர்ப்பத்தின் காலடியைத் தேடு. 


இறங்கிய  மழைத்துளிகள் எல்லாம் 
என் நினைவூட்டியதோ? 
பாலை நிலத்தில் நான் கம்பிகளைப் 
பற்றிக்கொண்டிருந்தேன்- நீ 
மழையில் நனைந்த நேரம் 


யாதொன்றும் பிழையில்லை 
இனியாவது என் மனைவியாயிரு.

No comments:

Post a Comment