Tuesday, December 28, 2010

பழமைவாதம் பழையபஞ்சாங்கம்

சில பெருசுகள் பழமைவாதம் பேசுவதை நாம் எல்லோரும் கண்டிருப்போம். இந்த பெருசுகள் தங்களின் பிள்ளைகளுக்கும்  இந்த பழமைவாதத்தை பரம்பரை சொத்தைப்போல  விட்டுச்சென்றுவிடுவார்கள். இந்த சிறுசுகள் பெருசுகளாக மாறுவதற்கு முன்பே பழைய பஞ்சாங்கத்தை பாட ஆரம்பித்துவிடுவான்கள். என்ன கொடுமை சரவணன் இது? பழைய பாடல்கள், பழைய காலத்து ஆட்கள், அந்த காலத்து கலாச்சாரம்  என இந்தப்பெருசுகளின் தொல்லை தாங்கமுடியாது.
ஒரு விஷயம் தெளிவாக நான் சொல்கிறேன். கி.ராஜநாராயணன் கூட இதைத்தான் சொல்லுவார். மனுஷன் இருக்கும் இடமெல்லாம் மனுஷ நாற்றம் அடிக்கும். இந்த காலம் மட்டுமல்ல. எந்த காலத்திலும் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. இதை ஏன்  இந்த பெருசுகள் உணர மறுக்கிறார்கள்? அந்த காலத்திலும் கள்ளக்காதல் இருந்தது. உலகின் முதல் தொழிலே விபச்சாரம்தான். 'தானே கள்வன், தாமது பொய்ப்பின் யாமெவன் செய்கோ ' என குறுந்தொகைத்தலைவி   குருகு ஒன்றை சாட்சி தேடி  குமுறவில்லையா என்ன? அன்று செய்த 'மடலேறுதல்' தான் இன்று 'Eve Teasing '.  

இதே மாதிரி பழைய பாடல் ரசிக்கும் கும்பல் ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரியான சங்கீதம் அது. ரொம்ப  தடவை கேட்டால் போர் அடிக்கும். கே. வி. மகாதேவன் போன்றவர்களின் இசை நன்றாக இருக்கும். 'வாராய் நீ வாராய்' பாட்டைகேட்டு பாருங்கள். கிடார்-இன் இன்னிசையை நுகர முடியும். எம். எஸ். வி. இசை அந்தளவுக்கு கவராது. எம். எஸ். வி ஒரு realist and a romanticist .  இளையராஜா,  ஹாரிஸ் ஜெயராஜ், ரஹ்மான் போன்றோரின் இசையை ரசிக்கும் அளவுக்கு என்னால் பழைய பாடல்களை ரசிக்க முடியவில்லை. பழைய இசையில் புதுமை இல்லை. புதிய சத்தங்கள் இல்லை. புதிய தொழில்நுட்பங்கள் இல்லை.
அதே மாதிரி பழைய படங்கள். சில பழைய படங்களுக்கு  இன்னும் இருக்கும் மரியாதை வியப்பளிக்கிறது. உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், பாசமலர், உலகம் சுற்றும் வாலிபன்  போன்ற படங்கள். இந்த படங்களை இப்போது வெளியிட்டால் கூட குறைந்தது ஐம்பது நாட்கள் ஓடுகிறது.  தமிழர்களின் வீக் பாயிண்ட்-ஐ சரியாக கணித்தவர் எம்.ஜி.ஆர் தான். தன்னைவிட குறைந்தது நாற்பது வருடங்களாவது இளைய நடிகையை கவர்ச்சி (கவுச்சி)  நடனம் ஆடவிட்டு, அடித்தட்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இயக்குனரின் சொல் பேச்சு கேட்டு எம்.ஜி.ஆர் நடித்த காலத்தில் வெளிவாத படங்களெல்லாம் காவியம்.  அவர் சொல் பேச்சு கேட்டு இயக்கப்பட்ட படங்களைப்பார்த்தால்தான் தெரியும்.
இதெல்லாம் ரசித்தார்கள் நம்ம பெருசுகள்.

இந்த 'பாசமலர்' படம் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சிக்மொந்த் பிரைட்-இன் கூற்றுப்படி எல்லா உறவுகளுக்கும்  அடிப்படை sexual Energy-யே. தாய்-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி என எதிர் பால் உறவுகள் மட்டுமல்லாது ஓர்பால் உறவுகள் கூட sexual energy -ஐ சார்ந்தே இருக்கும். இந்தகூற்றை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள், சிக்மொந்த் பிராய்டின் முடிவு  மனநோயாளிகளிடம் பரிசோதித்த  ஆராய்ச்சியின் முடிவு என மறுதலிப்பார்கள். ஆனால் Sex is one of the basic instincts. சாமானியனுக்கும் மெண்டலுக்கும் ஒன்றே.     அப்படி என்ன தங்கை மீது அப்படி ஒரு பாசம்? என்ன எழவு இது? இந்த படம்  ஒரு பாதியை இழந்து திரியும் மறு பாதியின் அவலத்தைப்பற்றியது. சிக்மொந்த் பிரைட்-இன் கூற்றுப்படி பார்த்தால் எனக்குத்தெரிந்து பாசமலர் படம் போன்ற ஒரு vulgar - ஆன படம் இதுவரை தமிழில் வெளியானதில்லை.   

No comments:

Post a Comment