Wednesday, December 22, 2010

பெரிய கோயிலுக்கு  பிறந்தநாள் வாழ்த்து  


ஆயிரம் ஆண்டு கோயில் கட்டிய 
செங்கோல் மன்னன் இராஜராஜன் 
ரொம்ப பெருமை உங்களுக்கெல்லாம் 


கற்களே இல்லா தஞ்சை மண்ணில் 
கற்கள் கொண்டு கோயில் சமைத்தான் 
சிற்பங்கள் செய்து நடுவில் ஒரு 
சிவலிங்கத்தையும் செருகி வைத்தான்


எத்தனை இரத்தம் சிந்தியிருக்கும்  
எத்தனை தலைமுறை அழிந்திருக்கும் 
யார் கேட்டார்கள் இந்த கோயில்களெல்லாம் 
கோயில் இல்லா நாடுகளில் மக்கள் 
குடியிருக்கவில்லையா என்ன? 


சேர பாண்டியர் பல்லவர் கொன்றான் 
கடல் கடந்து இலங்கை வென்றான் 
புவிமையக் கோடு தாண்டி 
புதிய தீவில் பெண்ணாண்டான்


அவன் மகனோ 


கனக விசயரை கல் சுமக்க விட்டான்
சமகாலத்து கற்பினை அறிமுகம் செய்தான் 
கங்கை வென்றான் கடாரம் கொண்டான்
தகப்பன் செய்தது போதாதென்று 
தானும் ஒரு கோயில்  செய்தான்
ரொம்ப பெருமை உங்களுக்கெல்லாம் 
  
பரங்கியரை வெறுத்தீர்கள் 
அமெரிக்கரை வெறுக்கிறீர்கள் 
உங்களின் உண்மை நிறத்தை அறிந்துகொண்டீரா?
அதுவும் ஏகாதிபத்தியத்தின் நிறம் தான். 


இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டு 
பெரிய கோயில் நிலைத்திருக்கும் 
நீங்கள் கண்டு கண்டு பரவசப்பட


பெருமைபட்டு கொள்ளுங்கள் 

No comments:

Post a Comment