Saturday, June 18, 2011

கம்ப்யூட்டருக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்-கைப்புள்ள

 

சுப்ரமணியம் சுவாமி என்று ஒரு காமெடி பீஸ் ஒண்ணு நாட்டுல திரிஞ்சிக்கிட்டு இருக்கு. அந்தாள காமெடி பீஸுன்னு மட்டும் நினைச்சிரக்கூடாது. அப்பப்ப அது விஷத்தையும் கக்கும். அதாவது பாம்புன்னும் அடிக்க முடியாது. பழுதுன்னு மிதிக்கவும் முடியாது.அப்பிடிக் கக்குன விஷத்தைப் பத்தித்தான் இந்தக் கட்டுரை.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல அது சொல்லியிருக்கு கம்ப்யூட்டருக்கு ஏத்த பாஷை சமஸ்கிருதம்தானாம்! நாசா விஞ்ஞானிகள் கூட அப்பிடித்தான் சொல்லுறாங்களாம். அந்த புத்தகத்தோட பேரு பரமஹம்ச- த வேதாந்திக் டேல். எழுதினவன் பேரக் கேளுங்களேன்! வாயால சிரிக்க மாட்டீங்க! சுப்ரமோனி அவன் பேரு! நேமாலஜி!!!

இது ஒரு பெல்ட்டு கும்பல்ன்னு இப்ப தெரியுதுல்ல?!

அதுல சூனா சானா சொல்றாரு! அமெரிக்காவுல ‘பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை’ ங்கற தலைப்புல இத உரையாற்றக் கூப்புட்டாங்களாம். நீதான் கடலையே தாண்டக் கூடாதே... உன் இந்து சனாதன தர்மத்தின் படி. நீ ஏன் அங்க போன?  

மேற்கத்திய நாடுகள்ல, இந்தியாவின் மந்தமான பொருளாதார வளர்ச்சிய ‘The Hindu rate of Growth’ அப்படின்னுதான் சொல்லுவாங்க! அதாவது ஒரு நாட்டோட GDP யோட வளர்ச்சி  4%-5% இருந்துதுன்னா அதுக்குப் பேரு இதுதான்! இந்து மதத்தால, இந்தியாவால பொருளாதாரப் பாடத்துலயே ஒரு புது Terminology வந்ததுன்னா பாத்துக்கிடுங்க.   சத்தியமா எனக்குத் தெரிஞ்சி இந்து மதம் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படும் என எந்த ஈரோப்பியனும் அமெரிக்கனும் மனதால் கூட நினைத்திருக்க மாட்டான்! இந்தாள பின்ன எதுக்கு உரையாற்றக் கூப்பிட்டாங்களாம்?

தெரியல!

அப்பறம் அந்த ஜந்து இன்னொன்னும் சொல்லுது. திராவிடன்-னு ஒரு இனமே இல்லையாம். வெள்ளக்காரன் வந்ததுக்கப்புறம்தான், அவன்தான் அப்படிப் பிரிச்சானாம். அடப்பக்கிப் பயலே! கால்ட் வெல் எழுதுன திராவிட மொழிகள் பத்தினப் புத்தகத்த படிச்சிரிக்கியா நீயி? ஒரு எழவும் தெரியாம எப்பிடித்தான் மைக்கப் புடிச்சி பேசுறானுங்களோ?

அமெரிக்காகாரன் இந்துத்வா மேலயும் இந்து சனாதன தர்மங்கள் மேலயும் ரொம்ப ஈடுபாடு காட்டுறாங்களாம். அதான் உங்க தானைத்தலைவர் மோடிக்கு விசா மறுத்தப்பவே தெரிஞ்சிப் போச்சே! இப்போல்லாம் அமெரிக்கா ஜிகாத் தீவிரவாதிகளைவிட இவன மாதிரிப் பயலுங்க கிட்டதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்காங்க!   அப்படியே ஈடுபாடு காட்டினாலும்தான் என்ன இப்போ? எவனோ நாலு லூசுப் பயலுங்க, கேமரா முன்னாடி துணிய அவுக்கிற ரெண்டு நடிகைங்க  ஆகா ஓகோன்னா அதுக்கு நாங்க ஏன் செவி சாய்க்கணும்?

இந்த விஷப்பூச்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது...மந்திரியாக. மேலிடத்தில் இன்னும் செல்வாக்கோடு உலவுகிறது. இதை என்ன செய்வது? 

மற்ற திராவிட மொழிகளில் உள்ள சம்ஸ்கிருத அசுத்தத்தின் நெடியையே தாளவில்லை. இதுல கம்ப்யூட்டர்-ல சமஸ்கிருதமாம். 

இவன் சொல்ற மாதிரி சமஸ்கிருதம் மட்டும் கம்ப்யூட்டர்-ல வந்துட்டா, அன்னைக்கு நான் அதை தொட்டா, அதுக்கு மேல நான் சோத்துக்கைல சோறு திங்க மாட்டேன்யா
             

   

No comments:

Post a Comment