பொய்யென்று தெரிந்தும் சில
போலி உறவுகளை
அன்பிலா இதயங்களின் வழி
ஊறும் கானல் காதல்களை
கொல்லக்காத்திருக்கும் வெறியேறிய
விழிகள் வழி தேடுவதை
வெறியை அன்பாக மாற்றி நடிக்க
தெரிந்த மனிதர்களை
மாறிய வழிபாடுகளை
மாறும் மதப்பெயர்களை
மாறா மனிதர்களை
சிலவற்றை
எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
ஒரு வயிற்றில் பிறந்தாலும்
ஒன்றையொன்று விழுங்கத்துடிக்கும் சர்ப்பசிசுக்கள்
சூழல் மறுக்கும் சுக்ரீவன்கள்
வதம் செய்யக் கருதும் வாலிகள்
சிலவற்றை
எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
இருப்பினும்
சிதறிய மணிகளைக் கோர்த்துக்கொண்டு
நாம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.
No comments:
Post a Comment