Monday, June 6, 2011

சென்னையில் ஒரு வெய்யில் காலம்!

கடந்த சனிக்கிழமை இரவு ஒரு வேலையாக சென்னைக்கு புறப்பட்டேன்! ராத்திரி ஒன்பது மணிக்கு பஸ் புறப்படுகிறது. அதற்காக ஏழே முக்காலுக்கெல்லாம் நான் தயாராகிவிட்டேன்!
பஸ் ஸ்டாண்டு கூட ந்தா இங்கிட்டுதான். சாப்பிட்டு முடித்துவிட்டு ஆட்டோவில் ஏறினேன்! 8.15க்கு.  அந்த நேரம் பார்த்து ஒரு அதிர்ச்சி. பெங்களூரில் ஸ்டார் கிரிக்கெட் என்று சினிமாக்காரனுங்க எல்லாம் கிரிக்கெட் ஆடுறானுங்க.
(இவனுங்கள யாரு கிரிக்கெட் ஆட கூப்பிட்டது? சத்திய சோதனை)
நான் கிளம்பிய நேரம் அந்த மேட்ச் முடிந்து விட்டது. அந்த டிராபிக்-ல் என்னால் 9.15க்கு தான் பஸ் ஸ்டாண்டுக்கு போக முடிந்தது. டைம் கீப்பரைச் சுற்றி ஒரு ஐம்பது பேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.
கஷ்டப்பட்டு அவரிடம் டிக்கெட்-ஐ நீட்டி ' ஐயா, இந்த மாதிரி பஸ்சை மிஸ் பண்ணிட்டேன். எனக்கு வேற பஸ்-ல சீட கெடைக்குமா'-ன்னு கேட்டேன். அவரும் பெரிய மனசு பண்ணி ஒரு பஸ்-ல சீட கொடுத்தாரு.
என்னா ஒரே கஷ்டம்-னா நான் ஏசி பஸ்-ல டிக்கெட் போட்டிருந்தேன். இது நான்-ஏசி. அது பரவாயில்லன்னு ஏறிப்போயிட்டேன்!

சென்னை வெயில்ல வதங்கி ஒரு வழியா ஞாயித்துக் கிழமை (நேத்துதாம்பா) ராத்திரி பஸ் ஏறினேன்! இதுகூட ஏசி பஸ் தான். ஏறி உக்காந்து அரைமணிநேரம் ஆகியும் வேர்த்துக் கொட்டுது. 

 கண்டக்டரை கூப்பிட்டு,
'என்னா சார்! ஏசியே இல்ல. கொஞ்சம் கூட்டி வக்கக்கூடாதா ?' ன்னு கேட்டேன்! அவரு ஸ்டைலா என்ன பாத்துக்கிட்டே சொன்னாரு! ' இருக்கறது இவ்வளவுதான் சார். வர்ரதுன்னா வாங்க, இல்லன்னா வேற பஸ்
புடிச்சி வாங்க'-ன்னார். பெங்களூருக்கு அதுவும் ஞாயித்துக் கிழமை, ரிசரவ் பண்ண பஸ்ச வுட்டுட்டு வேற பஸ் பாத்துக்கறதா? கனவு கூட காணமுடியாது.

வேற வழி!?


பாயே மூச்கொண்டு பர்பேக்கு! அஷ்டே!

ஸ்ரீபெரும்புதூர் வந்தாச்சி. திடீர்னு ஒரு சகபயணி கத்த ஆரம்பிச்சிட்டார். அவர்கிட்டையும் அந்த கண்டக்டர் அதே ஸ்டைல்-ல பதில் சொல்லியிருப்பார் போல. அவருக்கும் இதே பிரச்சினை. எல்லோருக்கு மூச்சடைக்கிற மாதிரி வந்துடுச்சி. பஸ்சுக்குள்ள வேற வெப்பம் அப்பிடியே
காந்துது. ஒரு பத்து பேர் கெளம்பி டிரைவர்கிட்ட போயி வண்டிய ஓரங்கட்ட வச்சிட்டாய்ங்க. வேற வண்டி வந்தாதான் நாங்க வண்டியில ஏறுவோம், இல்லன்னா ரோட்டுலயே உக்காந்துருவோம்-னு பயணிகள் மிரட்டுனதால அந்த டிரைவர் டெப்போக்கு போன் பண்ணாரு.
அந்த முனைல இருந்து, ஒருத்தர் சொல்றாரு. ஏசி இல்லைங்கறத்துக்கு எல்லாம் இவ்வளவு பிரச்சினை பண்றீய்ங்களே, இதெல்லாம் ஓவரா இல்லையான்னு கேக்கறாரு. சாதாரண பஸ்ஸா இருந்தா பரவால்ல. ஜன்னலைத் தொறந்தா காத்து வரும். இது ஏ.சி வேற.
காத்தே உள்ள வாராதுய்யா! அதனால இன்னொரு பஸ்சு அனுப்புனாதான் ஆச்சுன்னு கண்டிசனா சொல்லிட்டாய்ங்க பசங்க (பயணிகள்தான். எல்லாம் வயசுப் பசங்க)

பத்தே முக்காலுக்கு நின்ன வண்டி, ஒன்னேமுக்கால் வரைக்கும் நிக்குது. அந்த மூணு மணிநேரமும் அந்த வண்டியோட என்ஜின அந்த டிரைவர் அமுத்தவே இல்ல. யோவ்! என்னாய்யா இது, என்ஜின ஆப் பண்ணமாட்டியான்னு கேட்டா, அந்த டிரைவர் 'ஆப் பண்ணினா மறுபடியும் ஸ்டார்ட் பண்ண முடியாது சார்'-னு சொல்றாரு.
அடப்பாவிகளா! டெப்போ-ல எப்புடின்னு கேட்டா அங்கயும் அப்படித்தானாம்!!!

ஆக தமிழ்நாட்டுல ஓடற பெரும்பாலான ஏசி வண்டிகளை ஆப் பண்றதே இல்ல. ரயில் என்ஜின் மாதிரி எப்பவும் ஆன்ல தான் இருக்கு. தேவைப் படும்போது ஆன் பண்ணிக்கிற மாதிரி அந்த ஸ்டார்டர்கள சரி பண்ணினாதான் என்ன? டீசல் சிக்கனம் தேவை இக்கணம் அப்புடின்னு இவிங்கதான் எல்லா பஸ்-லையும் எழுதி வைக்கிறாய்ங்க. இதுல இவ்வளவு டீசல சும்மா நிக்கற வண்டிகளுக்கு வீணடிச்ச்சா இதை விட கொடுமை உண்டா?
அரசாங்கமே இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கலாமா?

இந்தியாவுக்கான மொத்த எண்ணெய்த்தேவையில  70%க்கு மேல நாம இறக்குமதி பண்றோம். பெரும்பாலான பணம் எண்ணெய் இறக்குமதிக்கே சரியாப் போயிடுது. Approximately 30-35% of the GDP. இந்த நிலைமையில சும்மா நிக்கற வண்டிகளுக்கு டீசல் வேஸ்ட் பண்றத நிறுத்துனாலே
நிறைய பணத்த சேமிக்க முடியும். இதை அரசால ரொம்ப எளிமையா நடைமுறைக்குக் கொண்டு வரமுடியும்.

ஒன்னு முடிவு பண்ணிட்டேன்! இனிமே எஸ்ஈடி.சி-ல பயணம் பண்ணவே கூடாதுன்னு!   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

No comments:

Post a Comment