Wednesday, June 15, 2011

ஊழலின் தவிர்க்கவியலாத் தன்மை


ஊழல் ஒழியணும், ஊழல் ஒழியணும்னு ஏதோ காதல் படத்து கிளைமாக்சுல வர்ற பரத் மாதிரி சில பேர் புலம்பறத கொஞ்ச   நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன்! பா(ப்)பா ராம்தேவ் மற்றும் அன்னா ஹஜாரே  ஆகியோரை கழுவிக் கழுவி ஊத்தி திட்டி எழுதுபவர்கள் கூட, கடைசியில "ம்!! ஏதோ நல்லது நடந்தா சரி" என பெருமூச்சு விடுவதைக் காண்கிறேன்.

நிற்க! 

இங்கு ஊழலின் தேவை என்ன என்பதை  சற்று விளக்க வேண்டியிருக்கிறது . 


அரசியலில்  ஊழல் என்பது ஒரு ஒழிக்கப்பட முடியாத Evil என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஊழல் இல்லாத ஒரு அரசினை (அதுவும் வளரும் நாடுகளில்) நீங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 

In fact Corruption is desired for the stability of the political system. It is a necessary Evil. 

ஊழல் இல்லாத ஒரு அரசாங்கம் ஒரு dictatorship-க்குக் கீழோ அல்லது இன்னும் மோசமான perverted political systems-ஆன Oligarchy அல்லது aristocracyக்குக் கீழோ தான்  இருக்க முடியும். அதன் விளைவுகள் பெரும்பாலும் தாங்கவொண்ணாததாகத்தான் இருக்கும். இதுதான் உண்மை. 

ஒரு உதாரணம் சொல்லனும்னா ஐக்கிய நாடுகள் சபைல இருக்கிற பாதுகாப்பு சபையில உக்காந்து இருக்கிற  அஞ்சு தாதாக்களுக்கு இருக்கிற வீட்டோ பவர் மாதிரிதான் ஊழல். வீட்டோ அதிகாரத்தை வைத்து எத்தனையோ சர்வதேச அரசியல் நிகழ்ந்திருந்தாலும், எத்தனையோ நல்ல தீர்மானங்கள் கைவிடப்பட்டிருந்தாலும், ஐக்கிய நாடுகள் சபை இன்னும் நிலைத்திருக்க அந்த அதிகாரம்தான் காரணம்.  இல்லையென்றால் அதுல உக்காந்து இருக்கிற அமெரிக்க வஸ்தாது அந்த சபையையே கலைச்சிருவான்.  League of Nations என்கிற சர்வதேச அமைப்பை இப்படித்தான் கலைச்சான் அமெரிக்க வஸ்தாது! 

நான் சொல்றது லூசுத்தனமாக சிலருக்குத் தெரியலாம். அரசியல் அறிவியல் படிச்சவங்களுக்கு ரொம்ப நல்லாத் தெரியும்.நல்லாப் புரியும்.

ஊழல் ஒரு நாட்டுல தவிர்க்க முடியாத ஒண்ணு. ஊழல் இல்லையேல் மக்கள் அனுபவிக்கிற துயரங்களைப் பற்றி உலக நாடுகள்ல dictatorship ஐ  அனுபவிச்ச சில நாட்டு மக்கள் கிட்ட போய் கேளுங்க.


Transparancy International-ங்கற ஒரு அமைப்பு நாடுகள்ல நடக்கிற ஊழல் அளவை வச்சி தரவரிசைப்படுத்துறாங்க (Corruption Perception Index). அது டென்மார்க், சிங்கப்பூர் எல்லாம் ரொம்பவும் கை சுத்தமான நாடுகள் அப்பிடின்னு சொல்லுது. மொத்தமே ஒரு கோடி மக்கள் கூட தேறாத அந்த நாடுகளெல்லாம் சந்தோஷமா, Stable-ஆ இல்லையா  அப்பிடின்னு யாரும் கேட்டுறாதீங்க. இந்த தியரி அவங்களுக்குப் பொருந்தாது.

அதனால   

சும்மா ஊழல் ஊழல்னு கத்திக்கிட்டு இருக்காம, கண்ட கண்ட பய புள்ளங்க உண்ணாவிரதத்த பாத்து மயங்காம போயி அவங்க அவங்க சோலியப் பாருங்க!

நாடு தானா முன்னேறிரும்!

No comments:

Post a Comment