Monday, May 30, 2011

எறும்பூரித் தேய்ந்த பாறைகள்


எல்லோரும் சமம் எனக் கற்றுத்தந்த
கடவுள் வழிபாட்டை வீட்டுக்குள் விட மறுத்த
 சாதி, மதம், சடங்குகளை வெறுத்த 
எந்திரமயத்தை ஏழையின் எதிரியாய் பார்த்த


பொருட்பொதுவாக்கலை சொல்லித்தந்த
பொதுவுடைமைக் கருத்தை பொதுவாகக் கற்றுத்தந்த
கால்நடையை விடுத்து வாகனத்தில் சென்றால் கண்டித்த

உழையாப் பலன் பெறுவதை வெறுத்த 

என் தந்தை-இன்று

ஸ்ரீ காலஹஸ்திக்கு சென்று திரும்பும் வழியில்
டிரைவரிடம் சொன்னார்
தம்பி! அந்த AC-ய கொஞ்சம் போடுப்பா!


No comments:

Post a Comment